தாவர இனங்கள் சிலவற்றுக்குள் இருக்கும் “அபூர்வ சக்திகள்”

cornivorus

தாவர இனங்கள் சிலவற்றுக்குள் இருக்கும் “அபூர்வ சக்திகள்”

 

தாவர இனங்கள் மேல் ஒரு சில பூச்சிகள் பட்டாலே மடிந்துவிடும். அதே சமயத்தில் சில உயிரினங்களை நுகர்ந்து அதனால் உருவான செடிகளின் மீது குருவியோ மற்றொன்று ஏதாவது உட்கார்ந்தால் அப்படியே “பட்…!” என்று மூடி விடும்.

மின்சாரம் பாய்ந்தால் எப்படி இழுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அதில் உள்ள காந்தப் புலன் அறிவு எடுத்துக் கொள்ளும். அதற்கு அந்தச் சக்தி உண்டு.
1.காந்தத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்தக் குருவி மடிந்து விடுகின்றது.
2.காந்தத்துடன் கலந்த இரத்தத்தையும் எடுத்து விடுகின்றது.

ஆனால் இந்த மாதிரி அதிசயத்தை எல்லாம் நீங்கள் பார்க்க முற்பட்டு விடாதீர்கள். காடு மேடெல்லாம் நான் (ஞானகுரு) கஷ்டப்பட்டுப் பார்த்தேன். இதை உங்களிடம் வந்து சொல்கிறேன்.

இமயமலை அஸ்ஸாம் பகுதி வங்காளம் இந்தப் பக்கம் எல்லாம் அத்தகைய செடிகள் உண்டு. அஸ்ஸாம் காட்டுப் பகுதியில் அதிகமாக உண்டு. அக்காலங்களில் இத்தகைய தாவர இனங்கள் நிறைய உண்டு.

பச்சைப் பாம்பை எடுத்து விளக்கெண்ணெய் வித்தோடு சேர்த்து இந்த இரண்டு நிலைகளை ஊற வைத்து அதற்குப் பின் இந்த வித்தை முளைக்க வைத்து அதிலிருந்து வரும் வித்தை ஆட்டி எண்ணெயைக் கொடுத்தீர்கள் என்றால் எங்கே பார்த்தாலும் பச்சைப் பாம்பாகத் தெரியும்.

இதே மாதிரி பல பல கலவைகளைச் சேர்த்து அதிசயப்படுகிற மாதிரி எத்தனையோ செய்து காட்டலாம். அப்புறம் சாமி (ஞானகுரு) பெரிய சக்தி வாய்ந்தவராக மாறி விடுவார். அதிசயத்தையும் காட்டுகிறார் அற்புதங்களையும் காட்டுகிறார் என்று எல்லாம் போற்ற முடியும்.

ஏனென்றால்
1.சில வித்துக்களில் சில உயிரினங்களின் செல்களை எடுத்து அதை இணைத்து அதனுடைய வளர்ச்சிக்குத் தக்கவாறு செய்தோம் என்றால்
2.இதன் மணத்தை நுகர்ந்தாலே மடியும் தன்மை வருகின்றது.
3.மயக்கப்படும் நிலையும் வருகின்றது.
4.அந்த உருவமும் வருகிறது.
5.இது எல்லாம் தாவர இனங்களில் உள்ள வீரிய சக்தியின் நிலைகள்.

அத்தகையை சக்திகளைத்தான் ஒரு உயிரணு அதை நுகர்ந்து அது வளர்ச்சி பெற்ற அணுவாக மாறுகின்றது. அந்த விஷச் செடியை அது உணவாக உட்கொண்டு விஷத்தையே தான் ஆட்கொள்ளும் சக்தியாக அது வளர்கின்றது.

இப்படி அந்த உயிரணு எதை நுகர்ந்து தன்னுடைய நிலைகளை வளர்த்ததோ அதன் வரிசையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் தான்
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தையே பல காலம் பல வருடம் கழித்து
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக உங்களிடம் சொல்லுவது.

அது தான் ஓ..ம் நமச்சிவாய…. சிவாய நம ஓ..ம்..!

யாம் உபதேசிப்பதை எல்லாம் நீங்கள் கேட்டால் “ஓ..ம் நமச்சிவாய…!” அந்த உணர்வின் தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டால் சிவாய நம ஓ…ம்.
1.இந்த உண்மையின் உணர்வை நீங்கள் அறியலாம்.
2.பிறருடைய தீமையை போக்கவும் உங்களால் முடியும்.
3.நான் (ஞானகுரு) மட்டும் கெட்டிக்காரர் அல்ல.

குருநாதர் கொடுத்தார். அந்த உணர்வை வளர்த்தோம். அதே உணர்வை உங்களுக்குள்ளும் வளர்க்கச் சொல்றோம். வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செய்யலாம்.

ஏனென்றால்
1.பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை நீங்கள் வளர்த்தால்
2.உங்களுக்குள் தீமையை நீக்கிடும் சக்தி வளர்கின்றது.

பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் நல்ல அணுக்களை கொல்கின்றது. அப்பொழுது அந்தத் தீமை செய்யும் உணர்வே நமக்குள் விளையும்.

தீமை செய்பவனை வேடிக்கையாகப் பார்த்து அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்தாலே அந்தத் தீமை செய்யும் அணுவின் தன்மை விளைகின்றது.

ஆக வேடிக்கையாகப் பார்த்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் நமக்குள் வரும் போது அதற்கு ஆகாரம் தேவை. அந்த உணர்வை நுகரும் போது உயிரிலே பட்டு அந்த எண்ணங்கள் வந்து அதே செயலைத்தான் நாமும் செய்வோம்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

Leave a Reply