மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

cosmic power of human

மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

நாம் மனிதராக வாழும் அனைவரும் நாம் ஒருவருக்கொருவர் அருள் ஞானத்துடன் வாழ்தல் வேண்டும். ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எல்லோரும் பெறவேண்டும்.
2.அவர்கள் வாழ்கையில் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெறவேண்டும்.
4.அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும்.
5.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். அருள் ஞான வாழ்க்கை வாழ்தல் வேண்டும்.
6.இருளை அகற்றிடும் மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி நம் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று
7.நாம் எல்லோரும் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தியானிக்கும் எல்லோருடைய உணர்வுகளும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?

தீமையான உணர்வுகளை மனிதர்களான நாம் ஈர்க்கும் சக்தி குறைந்தால் இந்தக் காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் தனக்குள் இழுத்துச் சென்று அதை எல்லாம் அங்கே கரைத்து விடும். ஒளியாக மாற்றும்.
1.நம்முடைய ஆன்மா தூய்மையாகின்றது.
2.நாம் வாழும் இந்தப் பூமியான பரமாத்மாவும் தூய்மையாகின்றது.

உதாரணமாக அடுப்பிலே வைத்து எரிக்கப்படும் ஒரு விறகானது பல விதமான உணர்வுகள் வைத்து அது எரிகின்றது. விறகு எரிந்து நெருப்பாக மாறுகின்றது… ஒளியாக மாறுகின்றது.

விறகோ கருகிவிடுகிறது. ஆனால் அதற்குள் இருக்கும் அந்த மணங்கள் பிரிந்து விடுகின்றது. அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் சூரியன் கவர்ந்து ஒளியாக மாற்றிக் கொள்கின்றது.

அந்த விறகிலிருந்து வந்த ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு எந்த வித்தின் தன்மை இங்கு பெறுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக (அந்த விறகின் மணங்கள்) இணைந்து மீண்டும் விளைகின்றது.

ஆகவே எதன் எதன் உணர்வின் தன்மை எது எது விளைகின்றதோ அது எல்லாம் இயற்கையில் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. (ஆவியாக இருப்பது திடப்பொருளாகின்றது மீண்டும் அது ஆவியாகிறது மீண்டும் திடப்பொருளாகிறது)

ஆனால் நாம் “என்றுமே மாறாத நிலைகள் பெற வேண்டும்…!” என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆறாவது அறிவு பெற்ற மனிதன் நஞ்சினை வென்று ஏழாவது நிலையாக உணர்வுகளை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலை அடைந்த
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் அனைவரும் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
2.நம் உடலுக்குள் அதைப் பெருக்குதல் வேண்டும்.
3.அதை அழியாச் செல்வமாக நமக்குள் மாற்றி அமைத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.

Leave a Reply