கடை விரித்தேன்… கொள்வார் இல்லை…!

vallalar (2)

கடை விரித்தேன்… கொள்வார் இல்லை…!

நஞ்சினைப் போக்கும் உணர்வுகள் இராமலிங்க அடிகள் பெற்றிருந்ததனால் ஒரு நஞ்சு தீண்டிவிட்டால் இராமலிங்க சுவாமிகளின் பார்வை பட்டால் நஞ்சு தீண்டியவரும் நஞ்சு நீங்கி உயிர் பிழைத்து எழுந்து நடக்கத் தொடங்குகின்றனர்.

ஆனால் அவரவர் இச்சைகள் கொண்டு நமக்குப் பொருள் கிடைக்கும் புகழ் கிடைக்கும் என்ற நிலைகள் தான் மனிதனுடைய சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சென்றதே தவிர
1.பொருளும் புகழும் நமக்கு எத்தனை காலம் நிலைக்கும்?
2.புகழும் நம்மைத் தேடி வராது.
3.பொருளும் நம்மை நாடி வந்தாலும் நிலைக்காது.
4.நாம் பெறவேண்டியது என்ன? என்று இராமலிங்க அடிகள் தெளிவாகச் சொன்னார்.

இந்த வாழ்க்கையில் அனைத்தும் தெரிந்து கொண்டாலும் உயிர் ஒளியாக நின்றது போல் உணர்வுகளையும் ஒளியாக மாற்றி
1.என்றும் அருட்பெரும் ஜோதியாக
2.நம் உணர்வுகள் என்றும் சுடராக இருக்க வேண்டும் என்றுதான்
3.அவர் ஆறு திரையிட்டு
4.ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார்.

ஆனால், அக்காலத்தில் உள்ள மக்கள் இவருடைய அற்புதத்தைப் பெற்றால் எனக்கு உடல் சுகம் கிடைக்கும் பொருளை அனுபவிக்கலாம் புகழ் கிடைக்கும் என்றுதான் அவரை நாடிச் சென்றார்களே தவிர “அவர் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தாலும்…, யாரும் எடுப்பார் இல்லை”.

இதைத்தான் “கடை விரித்தேன்… கைக் கொள்வார் யாரும் இல்லை…,” என்று அவர் விடுபட்டுச் சென்றார். நொந்து சென்றார்.

தொட்டுக் காட்டித் தீட்சிதை கொடுத்து யாம் (ஞானகுரு) மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யவில்லை… பதிவின் மூலமே பெறச் செய்கிறோம்…! உங்களால் ஆற்றல்மிக்க சக்திகளை எளிதில் பெற முடியும்…!

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. அதே போல் தனி மனிதன் “ஒருவரால்” அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தைப் பெறுவதற்கு முடியாது.

1.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களுக்குச் சமமான நிலைகளில் வலுப்பெறுகின்றீர்கள்.
3.அவ்வாறு வலுப் பெறச்செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து… கவர்ந்து…, எடுக்க வேண்டும்.
4.நாம் கவரப்படும்போது நமக்கு முன் அந்த அலைகள் படர்கின்றது.
5.அப்பொழுது நம் ஆன்மாவில் இது கலக்கப்பட்டு தீமைகளைப் பிளக்கின்றது,

அவ்வாறு தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை நுகர்ந்து உள் செல்லச் செய்வதே உபதேசத்தின் நோக்கம்.

1.குண்டலினியைத் தட்டி எழுப்பி…
2.மண்டலத்தையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்…,
3.தொட்டுக் காண்பித்தார்கள்… பொட்டிலே வைத்துக் காண்பித்தார்கள்…,
4.ஐயோ.., “ஒன்றுமே அப்படிச் செய்யவில்லையே…” என்று சொல்வதற்கு இல்லை.

அருள் ஞானிகளின் உணர்வை “அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக மாற்றத்தான்” மீண்டும் மீண்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியை உணர்த்திக் கொண்டி வருகின்றோம்.

தொட்டுக் காட்டியோ எல்லை அறியாது எல்லை இல்லாத நிலைகள் போகும் மார்க்கங்களையோ சொல்ல  வரவில்லை.

உதாரணமாக சிறு குழந்தையாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நிச்சயம் விளைய வைக்க முடியும்.

அருள் ஞானியின் உணர்வை ஆழப் பதியச் செய்து அதனின் அருள் துணை கொண்டு அனைவரும் ஏங்கி அந்த உணர்வின் சத்தைக் கவரும் சந்தர்ப்பமே இது.

1.ஆழ் சக்தியுடைய அந்த மகரிஷிகளின் உணர்வுகள்
2.எட்டாத தூரத்தில் இருக்கும் அவர்கள் உணர்வுடன் நாம் ஒன்றிடல் வேண்டும்.

“ஜீனதீர்த்தங்கரின் போதனைகள்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

MAHAVIR

“ஜீனதீர்த்தங்கரின் போதனைகள்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?

உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அளித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?

உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

எண்ணம் எப்படித் தோன்றுகிறது…? அந்த எண்ணமே சொல்லாகவும் செயலாகவும் எப்படி வருகிறது…?

god-vishnu-image

எண்ணம் எப்படித் தோன்றுகிறது…? அந்த எண்ணமே சொல்லாகவும் செயலாகவும் எப்படி வருகிறது…?

 

திருமணக் காலங்களில் அக்கினியை வளர்ப்பார்கள். அதிலே பல பூக்களை இட்டு பல பொருள்களை இட்டு யாகங்களைச் செய்வார்கள். யாகத்தைச் செய்பவர் சொல்லும் (மந்திரங்களை) உணர்வுகளை மற்றவர்கள் சொல்லி அக்கினியில் அந்தப் பொருள்களை இடுகின்றனர்.
1.இது எல்லாம் புறத்தின் உணர்வின் இயக்கம் தானே தவிர
2.அகத்தின் இயக்கம் இல்லை.

ஒரு மனிதன் சாந்தமாக இருக்கின்றான் என்று கண்ணுற்றுப் பார்த்தால் அவனுடைய உருவத்தைக் கண்ட பின் “அவர் சாந்தமானவர்…!” என்ற உணர்வுகளை நமக்குள் ஊட்டுகின்றது.

எதன் வழியில்…?

1.நம் உயிர் ஒரு நெருப்பு.
2.அதிலே சாந்த உணர்ச்சிகள் படும் பொழுது அந்தச் சாந்தமான உணர்ச்சிகளை நமக்குள் ஊட்டி
3.சாந்தமான செயலைச் செய்யும்படிச் செய்கிறது.

அதே போல் ஒருவன் கோபப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்து அதைத் தெரிந்து கொள்ள விரும்பும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர நேர்கின்றது,

உயிரிலே பட்டபின் இந்த உணர்ச்சிகள் காரமான செயலாக அதாவது கோபமான உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
1.நம் கண்களும் சிவந்து விடுகின்றது,
2.நரம்புகளும் விடைத்து விடுகின்றது.
3.நாம் சொல்லக்கூடிய சொல் கேட்போர் உணர்வுகளிலும் அதே கார உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இதைப் போல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நம் உயிரில் படும் உணர்வுகள் அனைத்தும்
1.எப்படி ஒரு நெருப்பில் ஒரு பொருளைப் போடும் பொழுது அந்த மணத்தை வெளிப்படுத்துகின்றதோ
2.இதைப் போல் தான் நம் உயிரில் இந்த உணர்வுகள் படப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளை இயக்குகின்றது. (உணர்ச்சிகள் எழும்புகிறது)

ஆனால் புறத்திலே இருக்கும் நெருப்பில் ஒரு பொருளைப் போடும் பொழுது அந்தப் பொருளின் சத்து “கருகுகின்றது…!” போட்ட பொருளின் மணமும் வெளிப்படுகின்றது. ஆனாலும் “கருகிய உணர்வின் தன்மை தான்…!” அங்கே வருகின்றது.

1.ஒரு பொருளைக் கருக்கி…
2.அதனின் உணர்வை நுகர்வது என்பது உணவுக்குச் செயல்படுத்தலாம். (அதாவது உணவாக உட்கொள்ளப் பயன்படுத்தலாம்)
3.ஆனால் நாம் சுவாசிக்கும் உணர்வுக்கு அத்தகைய கருகிய நிலைகளைச் சுவாசிப்பதை
4.ஞானிகளும் மகரிஷிகளும் வெறுத்துள்ளார்கள்.

ஆகவே நாம் உயர்ந்த குணங்களையும் நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் என்றும் அவர்கள் வாழ்க்கை உயர வேண்டும் என்றும் அதன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் “நம் உயிரில் இந்த உணர்ச்சிகள் பட்டு…” அதனின் இயக்கமாக நம்மை நலமுடன் வாழச் செய்யும் சக்தியாகவும் உயர்ந்த வாழ்க்கை வாழச் செய்யும் சக்தியாகவும் இயக்கும்.

அதனால் தான் உயிரைச் “சங்கு சக்கரதாரி…” என்று ஞானிகள் காட்டினார்கள்.
1.உயிரிலே பட்ட பின் எழும் அந்தச் சப்தத்திற்கொப்ப உணர்ச்சிகளாகி
2.இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் சக்கரம் போல் சுழன்று
3.நம் எண்ணமாகவும் சொல்லாகவும் செயலாகவும் வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பார்த்துக் கேட்டு நுகர்ந்த அந்தச் சுவாசத்திற்கொப்பத்தான் நம்முடைய எண்ணமும் நம்முடைய சொல்லும் நம்முடைய செயலும் அமையும்…!

அருள் ஞானிகள் வெளிப்படுத்திய மெய் உணர்வுகளைச் சுவாசித்தால் நம் செயல் அனைத்தும் ஞானத்தின் வழியாகவே இருக்கும்.