எதிர்பாராத விபத்துகள் ஏற்படக் காரணம்

Curse rays

எதிர்பாராத விபத்துகள் ஏற்படக் காரணம் 

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே படமாக்கிப் பதிவாக்குகின்றார்கள். அதை அலை வரிசையில் அலைகளாக மாற்றி அனுப்புகிறார்கள்.
1.அதை இருக்கும் இடத்திலிருந்தே பதிவாக்கி
2.அதனின் உணர்வின் நிலையை உலகம் முழுதும் பரப்பச் செய்கின்றான் (RELAY) மற்றொருவன்.

உலகம் முழுதும் பரவச் செய்யும் போது அதே அலை வரிசையில் டி.வி. வழியாகவோ கம்ப்யூட்டர் மூலமாகவோ மற்றவர்கள் இருப்பிடத்திலிருந்து உற்றுப் பார்க்கும் நிலை வருகின்றது. இது புறத்தில் விஞ்ஞானக் கருவிகளால் நடக்கக்கூடிய சம்பவம்.

ஒருவருடன் நண்பன் என்ற நிலையில் நன்றாகப் பழகுகின்றோம். அவனை நமக்குள் பதிவாக்கி விட்டால் நண்பனின் நினைவு கொண்டாலே போதும். அவன் உருவ நிலை நம் முன் நிற்பதை காணலாம்.

1.ஆக மனித உடலுக்குள் ஒன்றைப் பதிவாக்கி விட்டால்
2.அவனின்று வெளிப்படும் உணர்வின் அலைகள் அங்கே பதிவாகின்றது.. அலைகளாக மாறுகின்றது…!
3.பதிவான உணர்வினை நினைவு கொள்ளும் போது “குவித்து” அந்த உணர்வின் தன்மையை அறிகின்றோம்.

அவனுடன் எந்த உணர்வுடன் உறவாடினோமோ அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் போது நமக்குள் உணர்ச்சியின் தன்மையாக உடலை இயக்குகின்றது.

பண்பு கொண்டு… பரிவு கொண்டு… நண்பன் எனக்கு உதவி செய்தான்… உபகாரம் செய்தான்…! என்ற உணர்வை நுகரப்படும் போது நமக்குள் மகிழ்ச்சியின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது. நண்பனை நினைத்தாலே நமக்குள் மகிழச் செய்யும் நிலையாக வருகின்றது.

ஆனால் பண்புடன் வாழ்ந்து வந்த நிலையில் சந்தர்ப்பத்தில் பகைமையாகி வெறுப்பின் உணர்வாக ஆகி தீமைகள் விளைந்தது என்ற உணர்வுகளை இருவரும் பதிவாக்கிக் கொண்ட பின் என்ன நடக்கிறது…?

தன் வாழ்கையில் சிரமம் என்ற உணர்வுகள் உந்தப்படும் போது எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்ற உணர்வின் வேகத்தைக் கூட்டும் போது
1.அவனில் உருவான இந்த உணர்வுகள்
2.இவனின் உணர்வு அங்கே பதிவானதனால்
3.அந்த உணர்வுகள் இரண்டும் மோதிப் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டி
4.உணவை உட்கொள்ளும் நேரமாக இருந்தால் சாப்பிடும் உணவை உள் இழுக்கும் செயலை இழந்து விடுகின்றது… புரை ஓடுகின்றது…!
5.ஒரு பருக்கை நுரையீரலுக்குப் போனால் மடிந்து விடுவான்.

ஆனால் ஒரு வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுற்றுப் பார்த்துக் கவர்ந்த உணர்வின் தன்மையை வைத்து வாகனத்தைச் சீராக இயக்கிச் சென்றாலும் நண்பர்களுக்குள் துரோகம் செய்தான் என்ற உணர்ச்சிகள் உந்தி எதிர்மறையான எண்ணங்கள் கொண்டு தாக்கப்படும் போது ஒரு நொடி அவன் சிந்திக்கும் தன்மை இழந்தால் உடனே விபத்தாகின்றது. (ACCIDENT)

மனிதனுக்கு மனிதன் வாழும் போது பகைமை உணர்வு கொண்டால் ஒரு தொழிலில் வேலை செய்யும் போது இத்தகைய நிலையானால் புரையாகி அந்தச் சந்தர்ப்பத்தால் மரணம் அடையும் நிலை கூட வருகின்றது.

ஒரு எலக்டிரிகல் டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறான் என்றால் இதைப் போல நண்பர்களுக்குள் தன்னுடைய வேகத்தின் உணர்வைக் கூட்டினால் சிந்திக்கும் செயல் இழந்து மின்சாரம் செல்லும் வயரில் கையை வைத்தான் என்றால் இவன் மடிகின்றான்.

இதைப் போன்று ஒரு நொடி தவறினால் மனிதனை அது வீழ்த்தி விடுகின்றது. ஆகவே மனிதனுக்கு மனிதன் தொடர்பு இல்லாது எவரும் இல்லை.
1.பகைமை கொண்டாலும் உணர்வுகள் தொடர்பு உண்டு.
2.மகிழ்ந்தாலும் உணர்வுகள் நமக்குள் தொடர்பு உண்டு.
3.மனிதர்கள் யாரும் பிரிந்து வாழ்ந்ததில்லை.

நாம் பிரிந்து வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம். ஆனால் பிரிவினையான எண்ணங்களை நுகரப்படும் போது நம் உடலுக்குள் அந்தப் பகைமையான உணர்வின் அனுக்களும் பண்புடன் வளர்ந்த அணுக்களும் போர் முறையாக மாறிவிடுகின்றது.

அது ஒன்றை ஒன்று உணர்ச்சிகளால் தாக்கப்படும் போது நம் உடலில் மேல் வலியும் கை கால் குடைச்சலும் வரும். சில பேருக்குப் “பளீர்…!” என்று ஊசி குத்துவது போல இருக்கும்.

ஏனென்றால் அந்தப் பகைமை உணர்ச்சி கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது அது நம் உடலுக்குள் வேதனையைக் கொடுக்கும் நிலையாக வருகின்றது.

நாம் எப்பொழுதோ சண்டையிட்டோம். அதனால் பகைமை ஆனது. இப்பொழுது அவனிடமிருந்து விடுபட்டிருக்கிறோம்…! என்று எண்ணுகின்றோம். ஆனால்
1.அவனின்று நுகர்ந்த உணர்வு நம்முள் நின்றே அதன் வீரியத்தை ஊட்டும் போது
2.நல் உணர்வை ஊட்டிய அணுக்கள் இங்கே அஞ்சி நடுங்குகின்றது.
3.அதனால் சிந்திக்கும் தன்மை இழந்து ஒரு செயலின் தன்மை குறைகின்றது… வேதனைப்படுகின்றோம்.

வேதனையை நுகரப்படும் போது மேலும் சிந்திக்கும் தனமை குறைந்து…
1.நினைத்த காரியம் நடக்கவில்லை என்றால் உணர்வுகள் உந்தப்பட்டு
2.கோபத்தின் உணர்ச்சி உச்சகட்டம் ஏறுகின்றது.
3..தன்னையே அழித்திடும் தன்மை வருகின்றது அல்லது
4.தன்னுடைய சார்புடையோரால் அந்தக் காரியம் நடக்கவில்லை என்றால் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்ற உணர்ச்சிகளே தோன்றுகின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வின் இயக்கங்களிலிருந்தெல்லாம் நாம் தப்புதல் வேண்டும். அதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.
1.ஈஸ்வரா…! என்று நம்முடைய உயிரைப் புருவ மத்தியில்
2.உடனுக்குடன் எண்ணும் பழக்கம் வந்து விட்டால் தீமைகளைத் தடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் தீமைகள் நமக்குள் உருவாகாது நன்மை செய்யும் சக்தியாக அதை மாற்றிக் கொள்ள முடியும்.

 

Leave a Reply