கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ…!

Adikalar

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ…!

 

அருள் ஞானத்தைப் பெறக்கூடியதைத்தான் “அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை..! என்று
1.நான் யாரிடமும் யாசிக்கவில்லை…
2.நான் யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது…! என்று இராமலிங்க அடிகள் இந்தப் பாடலைப் பாடுகின்றார்கள்.

அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது நமக்குள் ஒளியாக மாறுகின்றது. மற்றவர்கள் கேட்கும் பொழுது இல்லை என்ற நிலை வராதபடி அந்த அருள் ஒளி அவர்களுக்குள்ளும் படர்கின்றது.

1.நீ அன்பையே சிவமாக்கு…! என்று அவர் சொன்னார்.
2.அந்த அரவணைக்கும் உணர்வுகள் அன்பாகி இந்த உடலாகச் சிவமாக்கு.
3.எல்லாவற்றையும் நீ அரவணைத்துக் கொள்…!
4.இந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை உனக்குள் மகிழ்ச்சியூட்டும் ஒளியாகும் என்ற
5.இந்த உணர்வின் தன்மையைத் தான் அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை என்றார்.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தோஷத்தை உருவாக்கிவிட்டால் எனக்குள் இருள் வருமோ…? வராது…! இருண்ட நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகளுக்காக இராமலிங்க அடிகள் அதைச் சொல்கிறார்.

அப்பொழுது அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகள் அருள் பெரும் ஜோதியாகி தனிப் பெரும் கருணையாகின்றது.
1.நான் எண்ணியதை நீ உருவாக்குகின்றாய்… கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! (கந்தவேல் யார்…?)
2.நம் உயிர் தான் அந்தக் கந்தவேல்.

கந்த… அதாவது பலவிதமான உணர்வுகள் கொண்ட கோட்டை இது. நம் உடல் என்ற கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அதாவது வேல் என்றால் கூர்மையானது.
1.பலவிதமான உணர்வுகள் சேர்த்து நம் உடல் கந்தக் கோட்டம்.
2.அந்த உயிருடன் ஒன்றி நாம் எண்ணப்படும் பொழுது
3.அந்தக் கூர்மையின் நிலைகளில் இயக்குகிறது என்பதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே.. அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை…! என்றார் இராமலிங்க அடிகள்.

அங்கே கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்து கூர்மையாக… உணர்வின் ஜொலிப்பாக… உணர்வின் கூர்மையாக… உணர்வின் தன்மையை அறியச் செய்கின்றாய்…! நீ ஒவ்வொன்றையும் எனக்குள் ஒளியாக நின்று உணர்த்துகின்றாய்… அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய்…! என்று தன் உயிரிடம் தான் ஏங்குகின்றார்.

கந்தக் கோட்டம் என்று இந்த உடலுக்குள் இயங்கும் உயிரைப் பற்றித் தான் இராமலிங்க அடிகள் சொன்னார்.
1.இருளை அகற்ற வேண்டும்
2.ஜோதியாகப் பேரொளியாக ஆக வேண்டும் என்ற பொருள்படும்படியாகச் சொன்னார்.

Leave a Reply