சுகபோகத்தில் வாழ்ந்த காந்திஜி மகானாக மாறக் காரணம் என்ன..?

Barrister gandhiji

சுகபோகத்தில் வாழ்ந்த காந்திஜி மகானாக மாறக் காரணம் என்ன..? 

 

இன்று எடுத்துக் கொண்டால் மதத்திற்கு என்று குருக்கள் உண்டு. உயர்ந்த தத்துவத்தை எல்லாம் பேசுவார்கள்.
1.ஆனால் அந்தத் தத்துவங்கள் மற்றவருக்குத் தானே தவிர
2.அந்தத் தத்துவம் தனக்கில்லை என்று நிலைகளில் தான் நடந்து கொள்வார்கள்.

அந்தத் தத்துவத்தின் கீழ் நடக்காதிருந்தாலும் அந்தத் தத்துவத்தை வளர்க்கப்படும் போது மற்ற மதங்களைப் பழித்துப் பேசுவதும் பகைமை ஊட்டுவதும் போன்ற நிலைகள் தான் இன்றும் உண்டு. எல்லோரையும் இணைத்துச் சேர்க்கும் நல்ல பண்புகள் இல்லை.

ஆனால் அந்த உயர்ந்த பண்பு நம் நாட்டில் நம் காலத்தில் வளர்ந்த தவறு செய்த ஒரு மகானுக்கு எப்படி வருகிறது…? தன் சுகபோகங்களுக்கும் சிற்றின்பங்களுக்கும் மது வகைகளுக்கு அடிமையான அந்த மனிதன் காந்திஜி தான்…!

காந்திஜி அரசியல் சட்டங்களை உணர்ந்தவர். BHARAT LAW மேல் நாட்டிலே படித்துணர்ந்தார். மேல் நாட்டின் அறிவையும் அவர் உணர்ந்தார். மேல் நாட்டில் செய்யும் அநாகரிகத் தன்மையெல்லாம் இங்கேயும் வந்து செய்தார்.

இவர் தனக்குள் இன்பத்தையும் சுகபோகத்தையும் குடிப்பதையும் தன் தாய் தந்தையையும் மீறியும் செயல்பட்டவர். மேலை நாட்டினர் நாகரீகத்தையும் மேலை நாட்டார் செய்யும் செயல்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்.

ஏனென்றால் செல்வத்தின் செழிப்பில் ஜமீன்தார் என்ற முறையில் அவர் வளர்ந்து வந்ததனால் பல சுக போகங்களையும் அனுபவித்து வந்தவர் அவர்.

ஆனால் இவருக்கு எப்படி இந்த ஞானம் கிடைத்தது…?

ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலுக்காகச் செல்லும் பொழுது அவர் தன் கண் முன் பல தவறுகள் நடப்பதைக் கண்டுணர்ந்தார். அங்கே நீக்ரோக்கள் வேதனைப்படும் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உணர்கின்றார்.

மதத்தை அடிப்படையாகப் படிப்பதும் மற்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சட்டத்தைப் படித்த அவர் தீமையில் இருந்து இந்த மக்களை எப்படி விடுவிக்க வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் நாளுக்கு நாள் வலு பெறச் செய்கின்றார்.

காந்திஜி தனது வாழ்க்கையில் தவறுகள் பல செய்து இருப்பினும் அந்த தவறுகளில் இருந்து தான் எவ்வாறு மீள வேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாக அவருக்குள் மேலோங்குகின்றது.

பிரிட்டனிடம் இருந்து ஒரு மதத்தின் அடிப்படையில் சிக்கி அவனுக்குக் கீழ்
1.தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் அதிலிருந்து நீதி வேண்டும்.
2.உலக மக்கள் மற்றோர் அடிமையில் இருந்து மீள வேண்டும்.
3.அருள் ஞானிகள் காட்டிய அருள் செயல்கள் தனக்குள் வளர வேண்டும் என்ற பேருண்மையை தனக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றார் காந்திஜி.

அதே சமயத்தில் தான் படித்த படிப்பின் நிலைகள் கொண்டு உலக நிலைகளை அறிவதற்கு தன் எண்ணங்களைப் பரவவிட்டு உலக நூல்களை அனைத்தும் படிக்கின்றார்… படிக்கின்றார்…!

படிப்பின் நிலைகள் கொண்டு
1.நாட்டில் நடக்கும் அரசியல் வாழ்க்கையும்
2.மதங்கள் சேர்ந்து மத வாழ்க்கையும் மக்களை எப்படித் திசை திருப்புகின்றது..?
மக்களுடைய மன நிலைகள் எப்படி மாறுகின்றது…?

மதத்திற்கு மதம் போர் செய்வதும் மதத்திற்குள் இனங்கள் ஒன்றொன்று போர் செய்தும் உண்மையில் மகான்கள் கொடுத்த ஞானிகள் கொடுத்த மனித வாழ்க்கைக்கு உண்டான நிலைகள் சிதறுண்டு உண்மையைப் பெற முடியாது எவ்வாறு போகின்றது இந்த நாடு என்ற நிலையைத் தெளிவாகக் கற்றுணர்கின்றார் மகாத்மாஜி.

வான்மீகி இயற்றிய இராமாயணத்தைக் காந்திஜி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.

அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று விட்டால் நம்மை அறியாமல் இயக்கும் தீமை உணர்வுகளை அடக்கி தீமை செய்வோர் உணர்வுகளிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்று அதை முழுமையாக உணர்கின்றார்.

சுதந்திரம் என்றால்… “நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது…” அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை… “அந்நியர்கள்…” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3.”சகோதரத்துவத்தைத் தான்…” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.

”மகிழ்ச்சி…” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள் சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா…!). வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு அது தான்.

அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்… அவருடைய எண்ண வலுவால்… நம் நாட்டுக்குச் சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது. உலக மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார்.

நாம் அனைவரும் சகோதரர்களே…! என்றார் காந்திஜி. அவர் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க உணர்வுகள் நமக்கு முன் பரவியுள்ளது. அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அவர் உணர்த்திய சகோதரத்துவத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் பகைமைகளிலிருந்து விடுபடலாம். மன பலமும் மன வளமும் பெறலாம்.

Leave a Reply