உடலிலுள்ள நல்ல அணுக்களை எப்படிக் காக்க வேண்டும் – ஆத்ம சுத்தியின் மூலக்கூறு…!

Light atoms -divine

உடலிலுள்ள நல்ல அணுக்களை எப்படிக் காக்க வேண்டும் – ஆத்ம சுத்தியின் மூலக்கூறு…! 

நம் உடலில் நல்ல குணங்களால் உருவான அணுக்கள் இருக்கின்றது. ஆகவே நாம் நல்ல உடலாக ஆரோக்கியமாக இருக்கின்றோம்.

ஆனாலும் பிறிதொருவர் வெளிப்படுத்தும் கோபமோ ஆத்திரமோ வேதனையோ இவைகளை எல்லாம் சந்தர்ப்பத்தால் நாம் கேட்கவோ பார்க்கவோ நேருகிறது. அப்பொழுது
1.அவைகளை நேர்முகமாக நுகரும் பொழுது அந்த உணர்வலைகள் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
2.அதனால் நம் நல்ல அணுக்கள் அனைத்திற்கும் நல்ல உணர்வு செல்லாததால் சோர்வடைகிறது.. இயக்கம் குறைகிறது.
3.அந்த நேரத்தில் நம்மால் நல்லதை வலுவாக எண்ண முடிவதில்லை.
4.நுகர்ந்த உணர்ச்சிக்கொப்ப கடுமையான கோபமாகவோ அல்லது கடுமையான வேதனைக்கோ நாமும் ஆளாகின்றோம்.
5.இதனால் எந்தப் பலனும் நாம் அடையப் போவதில்லை.

வயலில் நல்ல விதைகளை விதைத்து அது வளரும் சமயம் வயலுக்குள் மறைந்துள்ள களைகள் முளைக்கின்றது. அது போல் நமக்குள் மறைந்த தீய குணங்களுக்கு ஆகாரம் கொடுப்பது போல் நம்முடைய அத்தகைய சந்தர்ப்பங்கள் அமைந்துவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை,

களைகளை அப்புறப்படுத்தவில்லை என்றால் நலல மகசூல் காண முடியாது. களை தான் வளரும். நல்ல பயிர்கள் வளர்வதில்லை.

இதை உணர்ந்து வெளியிலிருந்து எத்தகைய தீமைகள் வந்தாலும் அதைப் பற்றி எண்ணாது
1.என்னிடம் உள்ள நல்ல அணுக்களுக்கு நான் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கொடுப்பேன்.
2.அந்தத் தீமைகள் எனக்கு வேண்டாம்… என்று விலக்கி விட்டால்
3.பிறரின் உணர்வுகள் நம் உணர்ச்சிகளைத் தூண்டாது… அது நம்மை இயக்காது.
4.நம் ஆன்மா சுத்தமாகின்றது.

“நல்ல குணங்கள் வலுவாகும் பொழுது…” யார் நம் உணர்ச்சிகளைத் தூண்டும்படிச் செய்கிறார்களோ அவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்… அவர் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்…! என்று எண்ணுவதும் மிகவும் சுலபமாகின்றது.

பகைமைகளை மறக்கின்றோம். தீமைகளை மறக்கின்றோம். துன்பங்களை மறக்கின்றோம்.

ஆத்ம சுத்தி செய்யும் முறை இது தான். இதன் பலனை இருவருமே அடைய முடிகின்றது. எல்லோருக்கும் நல்லதாகின்றது.
1.நம் ஆன்மாவும் மற்றவருடைய ஆன்மாவும் சுத்தமாகும்
2,அந்த வலுவான நல்ல சந்தர்ப்பமாக அது அமைகின்றது.

 

Leave a Reply