நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் “ஒளியான அணுக்களை நமக்குள் உருவாக்க வேண்டும்”

spiritual-lights-third-eye

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் “ஒளியான அணுக்களை நமக்குள் உருவாக்க வேண்டும்”

 

நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் நூலம்படையை உருவாக்குகின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கிவிட்டால் தன் ஊசி போன்ற மூக்கால் ஈ உடலுக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சி உடலை அமிலமாக மாற்றி அதை உணவாக உட்கொண்டு விடுகின்றது.
1.ஈ முழுமையாக இருக்கும்.
2.ஆனால் அதனுடைய தசைகள் இருக்காது.

அதே போல் வலைக்குள் சிக்கும் இன்னொரு ஈயை இந்த நூலாம்படைப் பூச்சி என்ன செய்கிறது? தனக்குள் விளைந்த விஷத்தின் தன்மையை அந்த ஈயின் உடலுக்குள் பாய்ச்சி விடுகின்றது.

பாய்ச்சிய பின் ஈயின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சியை உருவாக்கும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
1.அப்படி மாறிய பின் அந்த ஈயின் ரூபங்கள் மறைந்து விடுகின்றது.
2.அந்த அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சிகளாக மாறி விடுகின்றது

அதாவது ஈயின் உடலில் இந்த நூலாம்படைப் பூச்சிகள் உருவாகி “பல ஆயிரம் நூலாம்படைப் பூச்சிகளாக…” வெளி வருகின்றது. (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

ஒரு குளவி என்ன செய்கிறது? ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி கூட்டுக்குள் அடைத்துப் புழுவைத் தன் இனமாகக் குளவியாக மாற்றுகின்றது.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் போது அதிலிலுள்ள அணுக்கள் அனைத்தையும் ஜீவ அணுக்களாக மாற்றும் போது
1.நூலாம்படைப் பூச்சியின் உருவாகக் கொச கொச என்று
2.பல அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

நூலம்படைப் பூச்சி தன் இனத்தை உருவாக்குவதற்கும் குளவி தன் இனத்தை உருவாக்குவதற்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.

நீங்கள் இதையெல்லாம் ஆர அமர்ந்து நிதானமாகக் கேட்கின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) இதைத் தெரிந்து கொள்வதற்கு அந்தப் பூச்சியகள் கருவாகி உருவாகும் நிலையை அதை அறியும் வரையில் எனக்குச் சாப்பாடு கிடையாது.

ஒரு நிமிடம் வேறு பக்கம் என் நினைவு திரும்பினால் குருநாதர் என்ன செய்வார்…?
1.உன்னை எதற்காகக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்…?
2.நீ எங்கே பார்க்கின்றாய்…? என்பார்.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் கூர்மையாகப் பாய்ச்சிய உணர்வின் தன்மையால் அது எப்படி உருமாறுகின்றது…? அதன் உணர்ச்சியின் தன்மை துடிப்பின் நிலைகள் எவ்வாறு வருகின்றது…?

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ அலைகளையும் டி.வி. அலைகளையும் ஒலி/ஒளிபரப்புகின்றார்கள். வீட்டில் இருக்கும் ரேடியோ டி.வி இவைகளைத் திருப்பி வைக்கும் பொழுது
1.ஒலி/ஒளிபரப்பாகி வரும் அந்த அலைகளைக் கவர்ந்து
2.அந்த அலைகளுக்குத் தக்க உருவமாகவும் ஒலியாகவும் நமக்குக் காட்டுகின்றது.

அதைப்போல நூலாம்படைப் பூச்சி பாய்ச்சிய உணர்வலைகள் அந்த உயிரின் (ஈயின்) துடிப்பால் ஈர்க்கப்பட்டு அந்த உணர்வுகள் நூலாம்படையின் ரூபமாக மாற்றுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இவை அனைத்தும் எந்த உயிரானாலும் எதன் நிலைகள் கொண்டாலும் ஆண் பெண் என்ற நிலைகளில் தான் இணைகின்றது.

ஒரு ஆண் நூலாம்படைப் பூச்சி தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மையை ஈயைத் தாக்கப்படும் போது ஒரு பெண் நூலாம்படைப் பூச்சியும் அதே போல அங்கே ஈக்குள் உமிழ் நீரைச் சுரக்கச் செய்கின்றது.

அப்படிச் சுரந்த பின்தான் ஈயின் உடலில் அமிலங்கள் மாறி அதன் ரூபமாக மாற்றுகின்றது. ஆண் பூச்சி மட்டும் அது தாக்குவதில்லை.

ஆனால் குளவியில் இருக்கக்கூடிய நிலையோ
1.உயிரின் இயக்கம் கொண்டு குளவி ஆண் என்ற நிலைகள் அடைந்த பின்
2,குளவிடமிருந்து சுரக்கும் உணர்வுகள் புழுவின் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.அது பெண் என்ற நிலைகள் அடைகின்றது.

அப்பொழுது புழு உடலுக்குள் உருவாகும் கருவின் தன்மையை குளவியின் ரூபமாக எவ்வாறு உருமாற்றுகின்றது..? என்று காட்டுகின்றார்.

நூலாம்படைப் பூச்சி ஆண் பெண் என்ற நிலைகள் அமைகின்றது. ஆனால் குளவி ஆண் பெண் என்ற நிலைகளில் வருவதில்லை. தன் விஷத்தின் தன்மையைப் புழு உடலில் பாய்ச்சப்படும் போது இந்த உடலிலுள்ள அணுக்களின் தன்மை பெண்பாலாக மாறிவிடுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு இயற்கையின் செயல்கள் எப்படி உரு பெறுகின்றது…! உடல்கள் எப்படி மாறுகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குளவி ஒரு புழுவைக் கொட்டி ஒரு புழுவாக மாற்றும் நிலையையும் நூலாம்படைப் பூச்சி ஒரு ஈயை பல நூற்றுக்கணக்கான நூலாம்படைப் பூச்சிகளாக மாற்றும் நிலைகளையும் குருநாதர் தெளிவாக்கினார்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். ஏனென்றால்
1.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
3.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
4.ஒளியான அணுக்களாக உருவாக்கி அழியா ஒளிச் சரீரம் நாம் பெற வேண்டும்.

Leave a Reply