இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் நாம் பிறவி எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Ultimate destination

இந்தப் பூமியில் மீண்டும் மீண்டும் நாம் பிறவி எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

புத்தனும் ஏசுவும் முகமது நபியும் அகத்தியரும் போகரும் கொங்கணவரும் ஐயப்பனும் பெற்ற அருளையெல்லாம் இம்மானிட உடலில் பிறந்த எல்லோருமே பெற்றிடலாம்.

இந்நிலையை ஏன் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தை இனி எண்ணிடாதீர்கள். இப்பொழுது சொல்வது மிகவும் முக்கியம்.
1.சுழன்று கொண்டே உள்ள உலகத்தின் சுழற்சியில் சிக்கிப் பல பல அவதாரங்களை எடுத்து பல உடல்களை எடுத்து
2.உலக ஆரம்ப நிலையில் அல்ல கல்கியில் ஆரம்பித்து கலியில் முடிந்து…
3.திரும்பவும் கல்கிக்கு வந்து திரும்பவும் கலியில் முடிந்து பல பல உடல்களை எடுத்து
4.ஏனப்பா இவ்வுலகத்தில் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

ஜென்மங்கள் வருவது எதனால் என்பது தெரிந்து விட்டது முதலிலேயே உங்களுக்கு…!

இப்பொழுது பெற்றிருக்கும் இவ்வுடலைக் “கடைசி உடல்…!” என்ற எண்ணம் வைத்து இவ்வுடலிலேயே உன்னுள் இருக்கும் ஆண்டவனை நீ புரிந்து கொண்டு
1.மறு ஜென்மம் எடுத்திடும் நிலைக்கு வந்திடாமல்
2.இக்கலியிலேயே உன் நிலையை ஒரு நிலைப்படுத்தி அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
3.சூட்சும உலகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த கல்கி பிறந்து கலி வந்து முடியும் வரை பல ஜென்மங்கள் எடுத்து அவதிப்பட வேண்டியதில்லை.

சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே எவ்வுடலையும் உன் நிலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவ்வுடலில் உன் நிலைக்குச் செய்யும் சேவையை முடித்துக் கொண்டு மறு உடலையும் எடுத்துக் கொள்ளலாம்.
1.பிறந்து வளர்ந்து பல நிலைகளில் மாறுபட வேண்டியதில்லை.
2.அந்நிலைக்கு வந்து வாழ்வது… “என்ன சோம்பேறி வாழ்க்கையா…?” என்று எண்ணிவிடாதே…!

அந்த வாழ்க்கை நிலையில் இம்மனித உடலுக்கு… இம்மானிட மக்களுக்கு… நல் வழி புகட்டி நல்லாசியை அளித்திடத்தான்
1.அவ்வாண்டவனின் அருளைப் பெற்று
2.நீ ஆண்டவனாக இருந்திடு…! என்று சொல்வதெல்லாம்.

திரும்பவும் சொல்கின்றேன்……! இக்கலியில் இப்பொழுது பெற்றிருக்கும் கடைசி உடல் தான் உங்களுடைய உடல்கள். இந்நிலையில் இருந்து நீங்கள் மாறுபட்டால்
1.வந்திடும் எதிர்ப்பையும் எண்ணத்தின் மாற்றத்தையும் வைத்து மாறுபட்டால்
2.அடுத்த மானிட உடல் இல்லையப்பா… மனித உடல் இல்லையப்பா…!
3.மிருக உடலுக்குத்தான் செல்ல முடியும்.

உமக்கு ஆண்டவர் எடுத்து கொடுத்த சந்தர்ப்பத்தில் கடைசிச் சந்தர்ப்பம். இது இந்நிலையை மாற்றி விடாதீர்கள்.

நான் பயமுறுத்துகிறேன்…! என்று எண்ணிடாதீர்கள். உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்துங்கள் நல் வழியில். அழியாத நிலை பெற்றுக் கல்கியில் கலந்திடுங்கள்…!

Leave a Reply