தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

Vali vadam - sukreevan

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

 

1.அகஸ்தியன் துருவனாகி தன் பதினாறாவது வயதில் திருமணமான பின்
2.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து
3.நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடந்து
4.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி
5.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி நஞ்சினை வென்று
6.பேரருள் பெற்று பேரொளியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வடதிசையில்
7.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
8.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதை வரிசைப்படுத்தி
9.நம் உடலிள்ள பல கோடி உணர்வுகளுக்கெல்லாம் ரெகார்டு (RECORD) செய்ய வேண்டும். அதாவது பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றோம் என்றால் அதிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் வரிசைப்படுத்தி இணைத்து மாட்டினால் தான் அந்த இயந்திரமே சீராக இயங்கும். மற்றதையும் இயக்கும்.

வரிசைப்படுத்தி மாட்டாமல் முன்னால் போடுவதை பின்னாடியும் பின்னால் போடுவதை முன்னாடி போட்டால் இடைஞ்சல் ஆகும் அல்லவா…! ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தி அதை இயக்க முடியாது.

அதைப் போலத்தான் வரிசைப்படுத்தி நாம் அந்த மெய் உணர்வின் தன்மையை நுகரச் செய்து அந்த உயர்ந்த சக்திகளை ஒவ்வொரு மனிதனும் பெறும் மார்க்கத்தை அன்று காட்டினார்கள். வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களிலிருந்து விடுபட வழி காட்டினார்கள் ஞானிகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் தன் உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் காலையில் இருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் எத்தனையோ கேட்டுணர்ந்துள்ளோம். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி உள்ளது.

அதை இழுக்காதபடி நம் உடலுக்குள் உட்புகாதபடி தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
1.இங்கே புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்தக் கதவை அடைத்தல் வேண்டும்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அடைத்து விட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
1.எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதற்கும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று சொல்லி
3.இப்படி அடைத்தவுடனே உள்ளுக்குள் வலுவாகிவிடும்.

உடலுக்குள் வலுவான பின் என்ன செய்யும்…?

கஷ்டப்பட்டதையோ துயரப்பட்டதையோ வேதனைப்பட்டதையோ இழுக்கக்கூடிய சக்தி இல்லை என்றால்
1.எதிலும் பிடிப்பு இல்லாத அந்தத் துன்பமான உணர்வின் அலைகளை
2.சூரியன் கவர்ந்து எடுத்துக் கொண்டு போய்விடும்.
3.நம் உடல்… நம் எண்ணங்கள்… நம் ஆன்மா… அனைத்தும் தூய்மையாகும்.

காற்றடிக்கும் பொழுது தூசி வீட்டுக்குள் வராமல் எப்படிக் கதவை அடைக்கின்றோமோ… அதைப் போல தீமைகள் நமக்குள் புகாதபடி நாம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…! அவ்வளவு தான்…!

Leave a Reply