நாம் தியானிக்க வேண்டிய இடம்

Polaris direct link

கேள்வி:-
துருவ நட்சத்திரத்தின் தியானம் மொட்டை மாடியிலோ அல்லது பூஜை அறையில் இருந்து செய்ய வேண்டுமா? எங்கிருந்து துருவ நட்சத்திரத்தைத் தியானிக்க வேண்டும்?

பதில்:-
துருவ நட்சத்திரம் நம் பூமியில் வடக்குத் திசையில் பூமியின் அச்சுக்கு நேராக விண்ணிலே உள்ளது. வருடம் தோறும் இரவு முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம்.

மொட்டை மாடியிலோ அல்லது வெட்ட வெளியிலோ தொடர்ந்து சிறிது நாட்கள் வடக்குத் திசையில் உள்ள வான் வீதியைக் கவனித்துக் கொண்டே வந்தால் அதைப் பார்க்கலாம். கண்களுக்கு அது சிறிது மங்கலாகத் தான் தெரியும்.

எங்கே இருந்தாலும் இருக்கும் அந்த இடத்திலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிக்க முடியும். இடம் முக்கியமல்ல. ஆனால் நம் நினைவு அங்கே செல்ல வேண்டும்.

நம் நினைவு அங்கே செல்ல வேண்டும் என்றால் ஞானகுரு துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேச வாயிலாகச் சொன்னதை ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். (AUDIO LINKhttps://wp.me/p3UBkg-4BE)

பின் கண்ணின் நினைவை நம் பூமியின் வடக்குத் திசையிலே அதுவும் குறிப்பாக வட துருவத்தின் வழியாகச் செலுத்தி விண்ணிலே துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அதாவது
1.ஒரு பொருளை நாம் எப்படிக் கூர்மையாக ஊடுருவிப் பார்ப்போமோ… 2.அதே போல் உதாரணமாக வில்லில் இருந்து எய்யப்படும் அம்பானது கூர்மையாக அதன் இலக்கைத் தாக்குவது போல்
3.கண்களிலிருந்து நம் நினைவுகள் செல்ல வேண்டும்.

நாம் இங்கே பூமியிலே இருந்தாலும் நம் நினைவுகள் அங்கே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருக்க வேண்டும். அந்த ஒன்றிய உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

கண்கள் வழியாக ஏங்கித் தியானித்த பின் நினைவு புருவ மத்திக்கு வர வேண்டும். முதலில் சொன்ன மாதிரி இரண்டு கண்களின் நினைவு மூன்றாவது புருவ மத்தியில் ஒன்று சேர்ந்து ஆய்த எழுத்து போல் (ஃ) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் புருவ மத்தியிலிருந்து ஈர்க்க அல்லது கவர அல்லது இழுத்து அதன் பின் சுவாசிக்க வேண்டும்.

1.இரண்டு கண்கள் + உயிர் வழியாக நம் உடலிலுள்ள நினைவுகள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்து
2.பூமியின் வடக்குத் திசையில் வட துருவத்தின் வழியாக அதைச் செலுத்தி
3.துருவ நட்சத்திரத்துடன் நேரடியாக மோதி அல்லது ஒன்றி அல்லது துருவ நட்சத்திரத்தில் நிலை குத்தி
4.அதிலிருந்து வெளிப்படும் இளம் நீல ஒளிக் கற்றைகளை அதாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று
5.சிறிய பிள்ளைகள் ஒரு சக்கரத்தில் இரண்டு துவாரத்தைப் போட்டு அதில் ஒரு கயிறைக் கட்டி முடிந்து இரண்டு கைகளிலும் வைத்துச் சுழற்றிய பின் இழுத்து இழுத்து விடும் பொழுது அந்தச் சக்கரம் இரண்டு பக்கமும் மாறி மாறிச் சுழல்வது போல்
6.நம் நினைவுகள் துருவ நட்சரத்திற்குள் சென்று அதை உயிர் வழி சுவாசத்தின் மூலம் கவர்ந்து நம் உடலுக்குள் பரவச் செய்ய
7.மீண்டும் அதே போல் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்து உடலுக்குள் திரும்பத் திரும்பப் பரவச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித் தியானித்தால் உங்கள் உடலுக்குள்ளும் சரி புருவ மத்தியிலும் சரி துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள் ஊடுருவி வருவதைக் காணலாம்.

ஒளியைக் காணவில்லை என்றாலும் புருவ மத்தியில் அழுத்தத்தை உணரலாம். உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் அந்த அதிர்வுகளை உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் கொண்டு வந்து சேர்க்கும் முறை இது. என்னுடைய அனுபவம் இதுவே.

சிறிது காலம் இவ்வாறு செய்து பழகி விட்டால் உங்களை அறியாமலே துருவத்தின் வழியாக உங்கள் நினைவு விண்ணுக்குச் சென்று துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்ளச் செய்யும். அங்கே இருக்கும் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பும் (LIVE) கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் மகரிஷிகளின் சக்தியையும் தியானத்தின் மூலம் எடுக்க குறிப்பிட்ட இடம் தேவையில்லை. எங்கே இருந்தாலும் இந்த முறைப்படி செய்தால் அந்தச் சக்திகளை எளிதில் பெற முடியும்.

 

Leave a Reply