வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

Power and wisdom

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

1.புற உலகில் உள்ள நிலைகளை நாம் எண்ணிப் பார்க்காது
2.புற உலகிலிருந்து நம்மைத் தாக்கும் சாபமோ… பாவமோ… கோபமோ…
3.மற்ற பழித்துப் பேசும் நிலையோ… இழுக்கான நிலைகள் பேசும் நிலைகளிலோ நாம் சிக்காது…
4.அவ்வப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து
5.நம் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் நம்மைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களைச் “சிக்கல்…!” என்று சொல்லாது அதிலிருந்து விடுபட ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

இந்தப் பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழகி விட்டால் உங்கள் வாழ்க்கையில் உயர்வான நிலைகள் கிடைக்க ஏதுவாக இருக்கும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே
1.சங்கடம் என்ற எண்ணத்தை உங்கள் எண்ணத்திலிருந்து அறவே நீக்கிடல் வேண்டும்.
2.குடும்பத்தில் கஷ்டம் என்ற வார்த்தையே உங்கள் வாயில் வராதபடி அது தடுக்க வேண்டும்.
3.யார் எதைச் சொன்னாலும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.எத்தகைய நோயாக இருப்பினும் “எனக்கு நோய் இருக்கிறது…!” என்று சொல்ல வேண்டாம்.
5.மகரிஷிகளின் அருள் சக்திகளை நான் பெற்று “என் நோயை நீக்குவேன்… நான் நலமடைவேன்…!” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் எண்ணி வந்தாலே போதுமானது. கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்பது போல் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நலம் பெறுவீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் ஒளியைப் பெற்று அவர் சொன்ன முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால் நாமும் அவரைப் போன்ற ஒளி நிலை பெறலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டு அகன்று விண்ணுலகம் சென்றார். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இன்றும் ஒளியின் சரீரமாக ஏகாந்தமாக நிலை கொண்டுள்ளார்.

அவர் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி ஆத்ம சுத்தி என்ற நிலையைச் செய்து மகரிஷிகளின் அருள் ஒளியைப் பற்றுடன் பற்றிப் பிறவா நிலை என்ற பெரு நிலை அடையலாம்.

அதே சமயம் இந்த வாழ்க்கையில் வந்த சகல தீமைகளிலிருந்தும் விடுபட்டு நமது வாழ்க்கையில் எது வந்தாலும் அதைச் சமாளிக்கும் திறனும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் நிலைகளும் நோய்கள் வராது தடுக்கும் நிலைகளும் நிச்சயம் நாம் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

Leave a Reply