பூமிக்கடியில் மறைந்து வாழும் எதிரிகளை எப்படிக் கண்டுபிடிக்கின்றார்கள்…?

Gnana and education

பூமிக்கடியில் மறைந்து வாழும் எதிரிகளை எப்படிக் கண்டுபிடிக்கின்றார்கள்…?

இன்று அமெரிக்காவிலோ அல்லது வேறு நாடுகளிலோ விளையாடுகிறார்கள் என்றால் என்றால் அதனின் ஒலி/ஒளி அலைகளை அங்கிருந்து பரப்பப்படும் போது நேரடி வர்ணனையாக உலகம் முழுவதும் காண முடியும் என்ற நிலைகளுக்கு இன்றைய விஞ்ஞான அறிவில் செய்துள்ளார்கள்.

அதைப் போல உங்கள் வீட்டில் ஒரு சிறு வயரை (WIRE) நுழைய வைத்து விட்டால் போதும். உங்கள் வீட்டில் என்னென்ன சப்தங்கள் நடக்கின்றதோ அங்கே இருக்கக்கூடிய உருவங்கள் எதுவோ அதைக் காண முடியும். கேட்க முடியும். எலிகளோ அல்லது தூசிகளோ அவைகள் மூலமாகப் பார்க்க முடியும்.

ஏனென்றால் உலகப் போர் நடந்த காலங்களில் மற்ற நாட்டு நிலைகளை அறிவதற்காகச் செய்தார்கள். பெரிய மகாநாடுகள் நடக்கிறது என்றால் அதாவது ரகசிய ஆயுதங்களாக அங்கே இதனுடைய நிலைகளை அமைத்து விடுவார்கள்.

பறந்து செல்லும் “ஈ…!” போன்ற உயிரினத்தில் அதற்குள் ரேடியத்தைப் பாய்ச்சி உள்ளே அனுப்பி வைத்து விடுவார்கள். உள்ளே சென்ற பின் அங்கிருக்கும் அதனின் உணர்வலைகளைக் கவர்ந்து என்ன பேசுகின்றார்கள்…? யார் பேசுகின்றார்கள்…? என்ற நிலையில் அந்த உருவத்தையே அங்கு படமெடுக்கும் அளவிற்கு இதைக் கண்டுணர்ந்தார்கள்.

மேலை நாடுகளில் ஒவ்வொரு நாட்டின் ரகசியங்களையும் ஒவ்வொரு நாட்டினுடைய நிலைகளையும் இப்படித் தான் கண்டுணர்ந்தார்கள்.
1.இப்போது அதெல்லாம் இல்லை.
2.அதைக் காட்டிலும் மிகவும் நுட்பமாக வந்துவிட்டார்கள்.

ரேடியோ அலைகளைப் போன்று லேசர் (LASER) என்ற நுண்ணிய அலைகளை விண்ணிலிருந்து அந்த ஒலி/ஒளி அலைகளைப் பரப்பப்படும் போது சூரியன் காந்த சக்தி அதை அணுக்களாக படரச் செய்கிறது.
1.எங்கே எதனை அறிய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ
2.அங்கே இந்த அலைகளைப் பாய்ச்சுகின்றார்கள்.
3.ஒரு இடத்தில் பேசுகிறார்கள் என்றால் அந்த ஒலி அலைகளின் காந்தப் புலன்கள்
4.சுவர்களிலே படப்படும் போது அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அதைப் பதிவாக்கிக் கொள்கிறார்கள்.
5.அதை மீண்டும் ஆயிரம் மடங்கு பெருக்கப்பட்டு
6.என்ன பேசினார்கள்..? எந்த உருவம் அதைப் பேசியது…? என்று விஞ்ஞான அறிவில் தெளிவாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அன்றைய மெய் ஞானி என்ன செய்தான்…? மெய் ஞான அறிவால் தன் உணர்வின் எண்ண அலைகளை விண்ணிலே பாயச்சி அதைத் தனக்குள் பெருக்கிக் கொண்டான்.

தன்னுடைய கூர்மையான எண்ணத்தைக் கோடி (எண்ணிலடங்காத) என்ற நிலைகள் அந்த உணர்வின் தன்மைகளைப் பெருக்கிப் பெருக்கி
1.விண்ணிலே என்ன செயல்கள் நடக்கிறது என்று தன்னுள் அறிந்தான் மெய் ஞானி.
2.அவன் ஆக்கத்தை ஊடுருவி அது எங்கிருந்து தோன்றியது…? என்ற நிலையை அறிய
3.விண்ணிலே தன் எண்ணத்தைப் பரப்பி அது உருவான காலத்தையும் அறிந்து கொண்டான்.
4.அதே சமயத்தில் அந்த உணர்வின் செயலாக்கங்கள் எதன் வழிகளில் மனிதனுக்குள் வந்தது..?
5.எதன் வழியில் மனிதனுக்குள் அது இயக்குகின்றது…? என்பதையும் மெய் ஞானி கண்டுணர்ந்தான்.

இதைப் போன்று தான் இன்றைய விஞ்ஞான அறிவின் தன்மையும் அது வளர வளர சூரியன் காந்த சக்தி ஒலிபரப்பும் ஒலி/ஒளிக்குள் சக்தி வாய்ந்த அலைகளைப் பாய்ச்சி
1.காற்றே புகாதபடி ஒரு அறை (ROOM) இருப்பினும்
2.தான் பாய்ச்சும் காந்தப் புலனறிவுகளை அந்த அறையின் மாடிகளில் (உச்சியி) உராய்ந்த பின்
3.அறைக்குள் இருக்கும் உணர்வலைகளை எல்லாம் அறிகின்றான்.
4.ஈராக்கில் சதாம் ஹுசேனைப் பிடிக்க இவ்வாறு தான் செய்தான்.

அவன் (சதாம் ஹுசேன்) கண்டு கொள்ள முடியாத இந்த உணர்வின் தன்மையை மேலே ஒலி/ஒளி அலைகளைப் பரப்பி அதற்குள் என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்ற நிலையும் அவன் முழுமையாக அறிந்து கொண்டான். விஞ்ஞான அறிவைக் கொண்டு தன் எதிரிகளை வீழ்த்திட அவன் இப்படிக் கண்டுணர்ந்தான்.

எந்தக் குண்டினாலேயும் தன்னை யாரும் தாக்காதபடி அவன் பூமிக்கடியில் கட்டடத்தைக் கட்டி (UNDER GROUND) வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவன் இருக்கும் இடத்தைக் கண்டு அதற்குள் ஊடுருவிக் குறி தவறாது பாய்ச்சி நொறுக்கி அவனைப் பிடித்தான். ஏனென்றால் இது இவனுடைய பரிச்சாந்தரம்.

இதே போல் தான் விண்ணிலே சுழன்று கொண்டிருக்கும் கோள்களின் இயக்கங்களையும் சில பாறைகள் (ASTEROIDS) அது போகும் பாதைகளையும் காணுகின்றார்கள். அதனின் உருவத்தையும் படமாக்குகின்றார்கள் விஞ்ஞானக் கருவிகள் கொண்டு.

அதனின் வேகத்தையும் அது மற்ற எந்தக் கோளில் போய் விழுகும் என்பதையும் அளந்தறிந்து சொல்கிறார்கள். ஏற்கனவே இருபத்தைந்து வருடத்திற்கு முன் பெரும் பாறை (கோளின் சிதைந்த பகுதிகள்) வியாழன் கோளில் விழுகும் என்று கணக்கிட்டார்கள்.

ஆனால் இதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகளில் அந்தப் பாறைகள் வியாழனில் விழுகும் என்று இவர்கள் சொல்வதற்கு முன்னாடியே யாம் சொல்லியிருக்கின்றோம்.

ஆரம்ப உபதேசங்களை (1980களில்) எம்மிடம் கேட்டுப் பதிய வைத்தவர்களுக்கு இது ஞாபகம் இருக்கும். இதற்கு முன் அது நம் பூமியைத் தொட்டே அது சென்றிருக்கின்றது. ஆனால் இங்கே விழுகவில்லை.

இதைப் போன்ற நிலையில் விஞ்ஞான அறிவு கொண்டு இவர்கள் ஒவ்வொன்றாக அறிந்து கொள்வதற்கு வெகு நாளாகும். ஆனால் நமது குருநாதர் அவர் கண்டுணர்ந்த அறிவால் அதனை எமக்குள் பதிவாக்கித் தெளிவாக எனக்கு எடுத்துக் (ஞானகுரு) காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்கு ஏன் சொல்கிறேன் என்றால் “இவருக்கு என்ன தெரியும்…?’ என்று நினைத்து லேசாக விட்டுவிடாதீர்கள் என்பதற்குத்தான்.

Leave a Reply