மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?

Image

blissful ADI PERUKKU

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?

 

ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயலாக்கும் போது தான் ஒரு குடும்பமாக இயங்க முடியும். அதில் மகிழ்ச்சி தரும் நிலையும் வரும்.

ஒன்றிணைந்து வாழ்ந்தாலும் சந்தர்ப்பவசத்தால் கோபம் வெறுப்பு போன்ற குணங்கள் இயக்கப்பட்டு அந்தச் சக்திகள் நம் உடலிலே பிரம்மமாகச் சிருஷ்டிக்கப்பட்டு விடுகின்றது.

அதனால் மனைவி மீது கணவனுக்கு வெறுப்பும் கணவன் மீது மனைவிக்கு வெறுப்பும் வரும் போது
1.அந்தக் குணம் இருவர் உடலிலும் சிருஷ்டிக்கப்படும் பொழுது அது பிரம்மம் தான்.
2.அதனின் சக்தியாக இயக்குவது பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
3.அந்த உணர்வின் ஞானமாக வெறுக்கும் உணர்வு வளர்ந்து வெறுப்பின் வித்தை உடலுக்குள் பெருக்குகின்றது

ஆனாலும் குடும்பம் ஒன்று சேர்த்து வாழ்ந்து அதிலே மனம் பெருகி அமைதி பெறுகி செல்வம் பெருகி ஞானம் பெருகி இவை எல்லாம் பெருகி வளரப்படும் போது வீட்டிற்குள் மகிழ்ச்சி பெருகுகின்றது. அந்த மகிழ்ச்சியினால் பொருள் காணும் நிலைகள் உருவாகின்றது.

அப்படி மகிழ்ச்சியின் நிலைகள் பெறப்படும் போது நல்ல பொருளின் தன்மைகளைக் கவர்ந்து அதைப்பெற வேண்டும் என்றும் அதன் வழிகளில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்றும் அதை எடுக்கின்றார்கள்.

1.சந்தோஷமாக இருக்கும் போது நீங்கள் ஒரு பொருளைப் பாருங்கள். அது தெளிவாகத் தெரியும்.
2.ஆனால் வெறுப்பின் தன்மை நமக்குள் வந்த பின் பொருளைக் காண்பதும் கஷ்டம்…! அந்தப் பொருளைப் பாதுகாக்கிறதும் கஷ்டம் தான்….!

மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு பொருளை எடுத்து நாம் பார்த்தாலும் அதைப் பந்தோபஸ்தாக வைப்போம். ஆனால் வெறுப்புடன் இருக்கும் பொழுது எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனே தூக்கி எறிவோம். எந்த வெறுப்பை நாம் எடுத்தோமோ அதனால் தீமையைப் பெருக்கும் நிலை வருகின்றது.

சநதர்ப்பத்தால் குடும்ப வாழ்க்கையில் மிகவும் வெறுப்பாகி விட்டால்… எதைக் கண்டாலும்
1.இது எதற்கு…? இந்த வீடு எதற்கு…? காடு எதற்கு…?
2.பொருள் எதற்கு…? துணி எதற்கு…? என்ற நிலைகள் இது பெருகிவிடும்.
3.இத்தகைய தீமையின் தன்மை பெருகி விட்டால் மனித உடலுக்குள் தீமைகள் பெருகி
4.தீமையின் உணர்வுகளைச் சேர்த்து அதற்குத் தகுந்த ஓர் உருவாக உடலின் அமைப்பாகப் பிரம்ம ரிஷி சிருஷ்டித்து விடுவான்.

யார்..?

நம் உயிரே பிரம்ம ரிஷியாக நின்று நமக்குள் அது சிருஷ்டிக்கும் பிரம்மாவாக நாம் எண்ணியதை எல்லாம் சிருஷ்டித்து உருவாக்கி விடுவான்.

1.நீங்கள் எதை எண்ணி எடுத்தாலும் அந்த ரிஷி தான் (உயிர்)
2.அதனின் உணர்வின் வேகமாக உங்களை இயக்குகின்றான்.
3.அதனால் தான் பிரம்ம ரிஷி என்பது.

ஆகவே உயர்ந்த குணங்கள் பெருக வேண்டும்… குடும்பம் உயர வேண்டும்… குடும்பத்திற்குகந்த செல்வம் உயர வேண்டும்…! என்றால் நாம் எதனைப் பெருக்க வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போதும் சரி இரவு படுக்கச் செல்லும் போதும் சரி “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி நினைவை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது அந்த அருள் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.

பின் உங்கள் வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வாருங்கள்.

சிறிது நாள் செய்து பழகிக் கொண்டால் மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் அணுக்களாக உருவாக்கி உங்கள் உடலுக்குள் அதைப் பெருக்கத் தொடங்கும்.
1.அருள் சக்தி உங்களுக்குள் பெருகப் பெருக அதனின் ஞானமாக இயக்கி
2.உங்களை அருள் வாழ்க்கை வாழச் செய்யும்.

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

Image

asdadik balagarkal

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

 

ஆற்றிலே வெள்ளம் செல்கிறதென்றால் அந்த வெள்ளத்தை நாம் விவசாயம் செய்யும் வயல்களிலே பாய்ச்சினால் என்னவாகும்…? வயல்களிலுள்ள பயிர் பச்சைகளை அழித்துச் சென்று விடும்.

அதைப் போல் தான் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆசைகளை நாம் வெள்ளமாகக் கொண்டு சென்றால் அது என்ன செய்யும்…?

நீரினால் ஏற்படும் வெள்ளம் மற்றதை அடித்துச் செல்வது போல்
1.மற்ற எந்தச் சிந்தனைகளும் சீராக வராதபடி
2.எந்த ஆசையை முன்னாடி வைத்தோமோ அந்த வழிக்கே நம்மை
3.மீண்டும் மீண்டும் அதிலேயே ஒரு நிலைப்படுத்திக் கொண்டு போகும்.
4.மற்ற எதையும் சீராக அறியவிடாது தள்ளிவிடும்.

ஆனால் அருள் மகரிஷிகளுடைய உணர்வுகளை நாம் இச்சைப்பட்டு நமக்குள் பெருக்கிக் கொண்டு வந்தால் நம்மை அறியாது சேர்த்த தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

உதாரணமாக ஓர் வெளிச்சத்தை நாம் போட்டோம் என்றால் அங்கிருக்கும் இருளைப் போக்கி மறைந்த பொருள்களை எல்லாம் காணச் செய்யும்.

அது போல் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைப்போமென்றால் நமக்குள் அது பெருகி நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி விடும். மெய்ப் பொருளைக் காணச் செய்யும்.

ஆகவே
1.மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி
2.நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
3.மெய் உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் பெருக்கிடல் வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரின் துணை கொண்டு பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றது மனிதனாக உருப்பெற்ற நம்முடைய இந்தத் தருணம்.

அஷ்ட திக்கையும் எட்டிப் பிடித்து… அதை உணரும் தகுதி பெற்றவன் தான் மனிதன்…! அஷ்ட திக்கும் என்றால் எந்தத் திசையிலிருந்து எது வந்தாலும் அது அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவன் ஆறாவது அறிவு பெற்ற இந்த மனிதன்.

எந்தத் திக்கிலிருந்து எது வந்தாலும் அஷ்ட திக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது சப்தரிஷி மண்டலம். தீமைகள் வந்தாலும் இருள் சூழ்ந்தாலும் அது எல்லாவற்றையும் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகின்றது.

அதே போன்று தான் துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் எத்தகையை நஞ்சினையும் அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது. இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் வெள்ளமாகப் பெருக்கி
2.அஷ்ட திக்கிலிருந்து வரும் இருள்களை எல்லாம் மாய்த்து
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக பத்தாவது நிலையை அடைவதே பதினெட்டாம் பெருக்கு,..!

உயிருக்குள் இருக்கும் உலகமும் உலகுக்குள் இருக்கும் உயிரும் – பிரம்ம ரிஷி…!

brahma-emerging-from-vishnu

உயிருக்குள் இருக்கும் உலகமும் உலகுக்குள் இருக்கும் உயிரும் – பிரம்ம ரிஷி…! 

1.ஓர் உயிர் அணு தோன்றும் போது இயக்கத்தை ஈசனாகவும்
2.அதனின் இயக்கத்தின் தொடருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணுவாகவும் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் விஷ்ணு என்ற வெப்பத்தின் தணல் ஆகும் போது அதிலே ஈர்க்கப்படும் சக்தியாகக் காந்தம் உருவாகுவதை லட்சுமி என்றும் வெப்பத்துடன் இணைந்த நிலைகள் கொண்டு இயங்குவதால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும் பெயரை வைக்கின்றார்கள்.

இதிலே நாம் எதை எதை எல்லாம் எண்ணுகின்றோமோ நமது உயிர் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து “ஓ…!” பிரணவமாக்கி என்று உணர்வின் சத்தை ஜீவனாக்குகின்றது (அதாவது உருவாக்குகின்றது)
அது எதனின் குணமோ
1.அதனின் மணமாக
2.அதனின் உணர்வாக
3.அதனின் ஞானமாக உடலிலே இயக்கும்.
4.ஆக விஷ்ணுவின் மகன் “பிரம்மா…!” என்று பெயரை வைக்கின்றார்கள்.

உயிரின் இயக்கத்தால் ஏற்படும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தான் கவர்ந்த சத்தின் தன்மையைத் தன்னுடன் இரண்டறக் கலக்கச் செய்யும் போது அதிலே உருப்பெறுவது தான் “விஷ்ணுவின் மகன் பிரம்மா…!” என்பது.

இயக்கத்தை ஈசன் என்றும் இயக்கத்தால் ஏற்படும் அந்த வெப்பம் விஷ்ணு என்றும் வெப்பத்தால் கவரும் காந்தமாகும் பொழுது அது லட்சுமி ஆகின்றது.

நாம் ஒரு உயர்ந்த பொருளைப் பார்க்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்போது அந்தக் காந்தம் இயக்குகின்றது.
1.அந்த இயக்கத்தின் தொடர் நம் உயிரிலே இயக்ககப்படும் போது ஓ…! என்று பிரணவமாகின்றது.
2.உயர்ந்த ஒரு பொருளையோ மற்றதையோ பார்த்து அதைப் பெறவேண்டும் என்ற நினைவலைகள் கொண்டு
3.நமக்குள் நாம் சுவாசிக்கும் போது அது உயிரிலே பட்டு இயக்கப்பட்டு
4.அந்த உணர்வுகள் ஓ…! என்று பிரணவமாகின்றது.
5.பின் ம்…! என்று அது உடலாகச் சிருஷ்டிக்கின்றது.
6.ஆகவே தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா…!
7.ஏனென்றால் இது இயக்கத்தால் ஏற்படும் நிலை.

அதாவது நாம் நுகர்ந்த நிலைகள் விஷ்ணுவால் இயக்கப்படும் பொழுது “ஓ… ம்…!” அது பிரம்மம் “சிருஷ்டி..” உடலாகச் சிருஷ்டிக்கப்படும் நிலை பிரம்மா.

ஆனாலும் தான் நுகர்ந்து கொண்ட உணர்வின் தன்மை ஜீவனாக்கப்படும் போது பிரம்மாவின் மனைவியாக (சக்தியாக) “சரஸ்வதி…!” என்று காட்டுகிறார்கள் ஞானிகள்,

1.விஷ்ணுவின் மகனாகத் தனக்குள் இந்த உயிர் எப்படி இயக்குகின்றதோ
2.அதைப்போல நம் உடலிற்குள் எண்ணிய உணர்வின் சக்தியையும் அது இயக்குகின்றது.

அதனால் தான் விஷ்ணுவின் மகன் பிரம்மன் என்று சொல்வது. பிரம்ம ரிஷி. யார்…?
1.இந்த விஷ்ணுவைப் பிரம்ம ரிஷி என்றும்
2.அதே சமயத்தில் அவனிலே விளைந்த நிலைகள் அதுவும் சிருஷ்டிக்கும் தனமை பெற்றது.
3.பிரம்ம ரிஷியின் மகன் பிரம்ம ரிஷி. அதுவும் சிருஷ்டிக்கும் நிலைகள் பெறுகின்றது என்று தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நம் உயிரைப் பற்றியும் உடலைப் பற்றியும் உயிரின் இயக்க நிலைக்ளையும் உடலாக அது எப்படி உருவாக்குகிறது என்ற பேருண்மைகளைச் சாதாரண மனிதனும் அறிந்து கொள்வதற்காக உணர்ந்து கொள்வதற்காக இதை எல்லாம் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நாம் உணர்ந்து கொண்டால் எது நம்மை இயக்குகிறது…? எது நம்மை மாற்றுகிறது…? நாம் எதுவாக ஆக வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற மெய் ஞானம் பெற்று ஞானிகள் சென்ற மெய் வழியில் செல்ல முடியும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது…!