பக்திக்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசம்

Bhakti and Meditation

பக்திக்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசம்

 

நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு ‘’புலி வருகிறது… புலி வருகிறது…!” என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…? துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம், சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்.

“ஐய்யய்யோ…! புலி வருகிறது… புலி வருகிறது…!’’ என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன செய்யும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

இதைப் போலத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும். “நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்…!”

உதவி செய்தாலும்… அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள் உங்களுக்குள் ஆட்டிப் படைக்காதபடி ‘’ஆத்ம சுத்தி” என்ற இந்த ஆயுதத்தை எடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

உயிரான ஈசனிடம் வேண்டி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடமும்,
2.கண்களை மூடி ஒரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும்,.

கண்களைத் திறந்தபின் துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.

இந்த முறைப்படி செய்தால் அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

நாம் நகை வாங்கியபின் அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும் செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல அடுத்த நிமிடமே கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்…!” என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும்.

தியானம் என்பது எது…? நமக்குள் கெட்டது சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும். இதுதான் தியானம் என்பது.

பக்தியில் என்ன செய்கின்றோம்…? பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள்.

1.தியானம் என்பது நமக்குள் நல்லதைச் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது.
2.தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது
3.இந்த சக்தி இல்லையென்றால் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை
1.வலு கொண்டு உங்களுக்குள் பெறச்செய்து,
2.அருள் வாக்கின் நிலையாக உங்களுக்குள் கொடுத்து
3.எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளில் துன்பத்தைப் பார்க்கின்றீர்களோ… நுகர்கின்றீர்களோ… கேட்கின்றீர்களோ…
4.அவைகளெல்லாம் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான் இந்த ‘ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதம்.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.நாளை நடப்பவை அனைத்தும் நல்லவைகளாக இருக்கவேண்டும்,
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்,
3.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும்.
4.எங்கள் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் சக்தியாகப் படரவேண்டும்…! என்ற எண்ண அலைகளை நீங்கள் பரப்புங்கள்.

உடல் உறுப்புகளுக்குச் செய்ய வேண்டிய பயிற்சி…!

eye sight meditation

உடல் உறுப்புகளுக்குச் செய்ய வேண்டிய பயிற்சி…!

நாம் சண்டை இடுவோரை வேடிக்கை பார்க்கும் போது அவர்கள் கோபமான உணர்வுகள் நாம் வெளிப்படுத்துவதை நாம் கூர்ந்து கவனிக்கும் போது நம் கண்கள் அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் பதிவு செய்கின்றது. அதனால் நம் நல்ல குணங்கள் மறைந்து நமக்குள் கோபமோ அல்லது பயமோ வேதனையோ உருவாக்குகின்றது.

தங்கத்திற்குள் செம்பும் பித்தளையும் இணைத்தால் அது நகையாகின்றது. அது அழகாக இருக்கின்றது. ஆனால் அந்தச் செம்பையும் பித்தளையும் பிரித்துத் தூய்மைப்படுத்திய பின் தான் மீண்டும் அடுத்த நகையைச் செய்கின்றோம்.

அதைப் போல பிறருடைய துன்பத்தைக் கேட்டறிகின்றோம். துன்பப்படுவோர் நம்மிடம் வந்து துன்பத்தைத் துடைத்துக் கொள்வதற்காகச் சொல்லும் வார்த்தைகளைக் கூர்மையாகக் கேட்டுணரும் பொழுது தங்கத்திற்குள் செம்பும் பித்தளையும் கலப்பது போல நம் நல்ல குணத்தில் கலந்து விடுகின்றது.

துன்பத்தைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் நமக்குள் வந்த அந்தத் துன்பமான உணர்வை உடனுக்குடன் துடைக்க வேண்டும் அல்லவா…! ஏனென்றால்
1.நம்மைக் கேட்டுக் கொண்டு நம் உடலில் அழுக்குகள் சேர்வதில்லை.
2.இருந்தாலும் நாம் தெரிந்தே தான் தினசரி குளித்து சோப்பைப் போட்டு
3.அந்த உடலில் பட்ட அழுக்கை அப்புறப்படுத்துகின்றோம்.

இதைப் போன்று தான் பிறரை நாம் பார்க்கப்படும் போது அவர்களிடம் பழகும் பொழுது நம்மை அறியாதபடி நம் நல்ல மனதில் நம் ஆன்மாவில் தீமையான உணர்வுகள் அழுக்காகப் பிணைந்து கொள்கின்றது.

அத்தகைய அழுக்கைப் போக்குவதற்காக மகரிஷிகளின் அருள் ஆற்றல் மிக்க சக்தியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி நம் மனதைத் தூய்மையாக்க வேண்டும். அதற்குத்தான் இந்தத் தியானம்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களுடைய வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனை வரும் போதெல்லாம்
1.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
4.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்தி
5.ஒரு இரண்டு நிமிடம் இவ்வாறு தியானித்தால்
6.உங்கள் ஆன்மாவில் பட்ட உணர்வில் பட்ட அழுக்குகள் உடனுக்குடன் துடைக்கப்படுகின்றது

இதற்கு முன் நம் உடலுக்குள் அறியாமல் சேர்ந்த தீமையான உணர்வுகள் வாத நோய் இரத்தக் கொதிப்பு இருதய நோய் சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற நிலைகளாக விளைந்த நிலையில் இருக்கின்றது.

அதை எல்லாம் இந்தப் பயிற்சியின் மூலம் குறைக்க முடியும். எத்தகைய நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தித் தியானிங்கள். கண்களைத் திறந்தபடியே ஒரு இரண்டு நிமிடம் இவ்வாறு தியானியுங்கள்.

பின் அதே போன்று கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்போது கண்களைத் திறங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் இருக்கும். அதைப் போக்க அவரவர் நோய் போக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உதாரணமாக உப்புச் சத்து இருக்கிறது என்றால் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் சிறுநீரகம் (KIDNEY) முழுவதும் படர்ந்து அந்த உறுப்பு சீராக இயங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிங்கள்.

இந்த உணர்வுகள் உடலுக்குள் செல்லும் பொழுது சிறுநீரகம் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கலாம்.

சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் சிறுநீரகம் முழுவதும் படர்ந்து அந்தக் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த உறுப்பைச் சீராக இயக்கி எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்துக்கள் நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.உப்புச் சத்திற்கும் சர்க்கரைச் சத்திற்கும் இந்த இரண்டுக்குமே
2.நம் கிட்னிக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் உறுப்புகள் சரியாக இயங்கி நாங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தித் தியானிங்கள்.

மன நிலை (மன வலு) குறைவாக உள்ளவரும் பயமும் அதிர்ச்சியும் கொண்டு சிந்தனைத் திறன் குறைவாக உள்ளவரும் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் மன பலமும் மன வளமும் தெளிந்த நினைவும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த அருள் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

நீங்கள் தொழில் செய்யச் செல்கிறீர்கள் என்றால் யாரைச் சந்திக்கச் செல்கின்றீர்களோ அவரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.எனக்கு நன்மை செய்யும் எண்ணம் அவருக்கு வர வேண்டும்
3.எங்களுக்குள் சகோதரப் பாசங்கள் வளர வேண்டும்
4.நாங்கள் எடுத்துக் கொண்ட காரியம் தடையின்றி அது செயல்பட வேண்டும் என்று எண்ணினால்
5.உங்களுக்குள் அந்த மன பலம் கிடைக்கின்றது.

நீங்கள் இவ்வாறு எடுத்துக் கொண்ட அந்த மகரிஷிகளின் உணர்வின் எண்ணமே உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் ஆன்மாவாக மாறி அந்த உயர்ந்த எண்ணங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாகவும் தொழிலைச் சீராகச் செயல்படுத்தும் தன்மையும் வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலை ஏற்பட்டாலும் இதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான்
1.விஞ்ஞானத்தின் உணர்வால் வெளிப்படும் நஞ்சின் தன்மை உங்களைத் தாக்காத வண்ணம் காத்துக் கொள்ளவும்
2.இந்த வாழ்க்கையில் என்றுமே மன பலத்துடன் தொடர்ந்து செயல்படும் திறனும் உங்களுக்குக் கிட்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்தேன்… வரவில்லையே…! என்று எண்ணாமல் சீராக எடுக்கும் பயிற்சியை மேற் கொள்ளுங்கள்…! – மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்

Image

practice makes perfect

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்தேன்… வரவில்லையே…! என்று எண்ணாமல் சீராக எடுக்கும் பயிற்சியை மேற் கொள்ளுங்கள்…! – மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்

 

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் ஏங்கி எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் அதை எடுத்தேன்…! வரவில்லை என்று யாரும் எண்ண வேண்டாம்.

ஒரு அழுக்குத் துணியைத் துவைக்கிறோம் என்றால் அழுக்கு முழுவதும் போகும் வரையிலும் அடுத்தடுத்து சோப்பைப் போட்டு நீக்குகின்றோம்.

ஒரு உலோகத்தை உருக்கி அதை ஒரு பொருளாக்க வேண்டும் என்ற நிலையில் (வார்ப்பு – MOULDING) செயல்படுத்தும்போது சரியாக வரவில்லை என்றால் மீண்டும் அதை உருக்கிச் சரியான பருவத்திற்குக் கொண்டு வருகின்றோம். இதைப்போல தான்
1.மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் திரும்பத் திரும்ப எடுத்து
2.ஆத்ம சுத்தி என்ற நிலையில் உள் செலுத்தி
3.மெய் ஞானிகளின் உணர்வைச் சீராக வளர்த்திடும் எண்ண
4.வலுவை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத் தான் தியானமும் அதனின் துணை கொண்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைக் காற்றிலிருந்து எடுக்கப் பழக்குவதற்கே இந்த ஆத்ம சுத்தி.

தையற் கலையைக் கற்றுக் கொண்டவர்கள் நம்முடன் பேசிக் கொண்டே சீராகச் தைத்து விடுவார்கள். ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்ளச் செல்பவர்கள் சீராகக் கூர்ந்து கவனித்தாலும் அதை நேராகத் தைக்க முடியாது.

1.கூர்மையான உணர்வை மீண்டும் மீண்டும் அதற்குள் செலுத்தி
2.நம்முடைய உணர்வின் நிலைகளைச் சீராக வளர்த்துக் கொண்டால்
3.அந்த உணர்வில் நாம் வேலை செய்யும் எண்ணமே அது நம்மைச் சீராக அழைத்து செல்லும்.

உதாரணமாக கண் பார்வை இழந்தவர்கள் தன் உணர்வின் ஆற்றலால் சில பின்னல் வேலைகளைப் பின்னிப் பழகுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கமே சரியான அளவு கோலைப் பிடித்து அதைப் பின்னச் செய்கின்றது.

1.கண் தெரிந்து நாம் பின்னும் நிலையைக் காட்டிலும்
2.கண்ணற்றவர்கள் அதைப் பழகி அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அழகாகக் கலரையும் இணைக்கின்றனர்
3.தெளிவாக அந்தப் பின்னலையும் உருவாக்குகின்றனர்
4.கண்ணுள்ளவர்கள் கலரைப் பார்க்கின்றோம்… கண்ணற்றவன் தடவிப் பார்த்து அந்த உணர்வின் கலரைப் பார்க்கின்றனர்.

இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் அந்த நிலை பெறுவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்று பழகிக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அதை நீக்க உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் உயிருடன் இணைக்கச் செய்யும் போது அது ஜீவன் பெற்று உங்களுக்குள் அந்தச் சக்தி வளர்கின்றது.

வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறையான உணர்வுகளோ பலவீனமான எண்ணங்களோ உங்களுக்குள் வந்தாலும்
1.அதை மனதில் ஏற்றுக் கொள்ளாது
2.மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
3.அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகளைத் தணித்து
4.மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஓங்கி வளர்க்கச் செய்வதே ஆத்ம சுத்தி.
5.இதுதான் உண்மையான தியானம்…!