மூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…?

third-eye-

மூச்சலைகளை வைத்து அன்று குகைகளை உருவாக்கினார்கள் – அழுத்தத்தை வைத்துக் கடினமான பொருளையும் ஆவியாக மாற்றுகின்றார்கள் விஞ்ஞானிகள் – தீமைகளை ஆவியாக மாற்றுவது எப்படி…?

இரும்பு எவ்வளவு கடினமானது. இந்த இரும்பு உருவாவதற்குக் கதிரியக்கச் சக்தியே முக்கிய காரணம், நட்சத்திரங்களிலிருந்து வருவது தான் கதிரியக்கச் சக்திகள்.

சாதாரண நெருப்பிலே இரும்பை எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அது உருகாது. அந்தக் கதிரியக்கச் சக்தியினுடைய வெப்பம் (அழுத்தத்தால்) அதிகமாகும் போது தான் இரும்பு உருகத் தொடங்குகிறது. ஆனாலும் அந்தக் கதிரியக்கச் சக்தியிலிருந்து அது தான் மாறுவதில்லை.

அதே சமயம் இந்த அணுக் கதிரியக்கங்களைக் குவித்து அதை இரும்பிலே மோதச் செய்தால் இரும்பு அப்படியே ஆவியாக மாறிவிடும்.

அணு ஆயுதங்களை (ATOM BOMB) வெடிக்கச் செய்தால் பெரும் புயலாக மாறி இங்கே இருக்கக்கூடிய இடமே தெரியாத நிலைகளில் ஒவ்வொரு பொருளையும் மாய்த்துவிடும். ஏனென்றால் அணு சக்தியின் வீரியமடைந்த நிலைகள் அது.

இதைப் போன்று தான் எவ்வளவு கடினமான பொருளாக இருந்தாலும் பெரும் மலையாக இருந்தாலும் அதீதமான அழுத்தம் கொண்டு அதை அழுத்தப்படும் போது அப்படியே ஆவியாக மாற்ற முடியும்.

1.அன்று மெய் ஞானிகள் சாதாரண மனிதராக வாழும் காலத்தில்
2.தன் உடலில் எடுத்து கொண்ட விண்ணின் ஆற்றல்கள் கொண்டு
3.அழுத்தத்தின் தன்மை கொண்டு தன் மூச்சலைகளைப் பாய்ச்சி
4.பெரும் குகைகளை உருவாக்கித் தவம் இருந்தார்கள்.
5.அன்று அப்படிச் செய்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்னாடி வந்த பெரும் பகுதியானவர்கள் மனித இனத்திலிருந்து தான் தப்பித்துக் கொள்வதற்காக இதே அழுத்த நிலைகளை எடுத்துக் கொண்டு தனக்குச் சாதகமான நிலைகளைச் செயல்படுத்திச் சென்றார்கள்.

ஆனால் அவ்வாறு சாதகப்படுத்தினாலும்
1.பல மனிதர்களின் உடலிலிருந்து கதிரியக்கப் பொறியின் சக்திகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
2.சில காலம் கழித்து மனித ஈர்ப்புக்குள்ளேயே வந்து சிக்கிக் கொண்டான்.
3.அழுத்தத்தின் தன்மை கொண்டு பல அதிசயங்களைச் செய்த நிலைகள் எல்லாம் அரசர்கள் செய்த நிலைகள்.

நாம் சொல்லும் சித்தன் முனிவன் இவர்கள் எல்லாம் மாற்று அரசர்கள் போர் செய்து வரும் போது தான் தப்பிப்பதற்காகத் தன்னுடைய மூச்சலைகள் கொண்டு சில குகைகளை ஏற்படுத்தினார்கள். அது உண்மைதான்.

இப்படி இந்தப் புற நிலைகள் கொண்டு மனித உணர்விற்குள் வருவதுபோல
1.புறப் பொருளில் இருந்து எடுக்கப்பட்ட கதிரியக்கச் சக்திகள் (RADIOACTIVE MATERIALS) கொண்டு
2.எந்த ஒரு பொருளையும் அழுத்தி ஆவியாக மாற்ற முடியும் என்பதை
3.இன்று விஞ்ஞானிகள் கண்டுணர்நதிருக்கிறார்கள்.

அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்த சில நிலைகளை விஞ்ஞானிகள் இன்று இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ற சாதனங்களை உருவாக்கி அலைவரிசைகளில் வைத்து அளந்து அளந்து ஆராய்ந்து அறிந்து கொண்டார்கள்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க பேரருள் உணர்வுகளைக் கவர்ந்து
1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் அழுத்தமாக எண்ணினால் அது உடலுக்குள் சென்று
2.நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் தீமையான உணர்வுகளை ஆவியாக மாற்றி
3.நம்மையும் நம் உடலையும் நம் உயிரான்மாவையும் ஒளியாக மாற்றச் செய்யும்.

Leave a Reply