உருவத்தைப் பார்க்கின்றோம் ஆனால் உணர்ச்சிகளை நாம் பார்க்க முடிவதில்லை… உயிரிலே பட்டால் தான் உணர முடிகிறது…! – “வாயு புத்திரன் ஆஞ்சநேயன்… அனுமார்…”

Image

Hanuman

உருவத்தைப் பார்க்கின்றோம் ஆனால் உணர்ச்சிகளை நாம் பார்க்க முடிவதில்லை… உயிரிலே பட்டால் தான் உணர முடிகிறது…! – “வாயு புத்திரன் ஆஞ்சநேயன்… அனுமார்…”

 

நம் குழந்தை நோயால் வேதனைப்படுகிறான் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

அவன் நோயுடன் இருக்கும் போது “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற வேதனையை எடுத்தோம் என்றால் அவன் உடலில் சேர்த்த உணர்வுகள் நமக்குள் வேதனையை உருவாக்கும் அந்த அணுவாக மாறி விடுகிறது.

அப்போது அது வராமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று முதலில் இதை எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலு சேர்க்காமல்
1.பாசத்தால் அவன் உடலில் உள்ள நோயெல்லாம் போக வேண்டும் என்று வெறுமனே எண்ணி
2.அந்த வேதனையைத்தான் நமக்குள் எடுத்துத் தவறாகக் கலந்துவிடுகிறோம்.
3.அதாவது வேதனையான என்ற உணர்வு மோதும் போது இதனுடன் விஷத்தைத் தான் கலக்கிறோம்.
4.இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரிச் ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.அவன் உடலில் படர வேண்டும்
2.அவன் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும்
3.அவன் உடல் நலம் பெற வேண்டும்
4.அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்
5.தெளிவான மனம் பெற வேண்டும் என்று
6.குழந்தை வேதனைப்படும் உணர்வு நம் உயிரிலே பட்டு உணர்ச்சியைத் தூண்டும் பொழுது
7.நாம் இதை எடுத்து இரண்டையும் இணைத்து உருவாக்க வேண்டும்.
7.அப்போது அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் உருவாகாது.
8.இப்படி இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை…” அதாவது ஆஞ்சநேயன்…!
9.நேயன் என்றால் அது நமக்குள் பக்குவப்படுத்தும் தன்மைகள்.

அந்த உடலில் உள்ள நோயெல்லாம் நீங்க வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இணைத்துச் சொல்லாக நாம் சொல்லும் போது இந்த உணர்வு “வாயு…”

சொல் காதில் கேட்கிறது. ஆனால் கண்ணிற்குத் தெரிகின்றதோ..? உயிரால் உணர்ந்து தான் அறிகின்றோம்.

இப்போது நான் சொல்வது உங்கள் உயிரிலே பட்டு உணர்ந்து அந்த உணர்ச்சியால் தான் நீங்கள் அறிய முடிகிறது. கண்ணால் பார்த்தால் என் உடலைத் தான் பார்க்க முடிகிறது. அங்கங்கள் அசைவது.. நான் சொல்வதைத் தான் நீங்கள் பார்க்க முடியும்.

ஆனால் அந்த உணர்வு உயிரிலே பட்டால் தான் நீங்கள் அறிய முடியும். உயிரிலே பட்டதும் அதை உணர முடிகின்றது. அந்த உணர்ச்சி உங்கள் உயிரில் இயக்கப்படும் போது தான் அது இயங்குவதை… உணர்ச்சியால் உங்கள் உடலில் நீங்கள் அறிகின்றீர்கள்.
அதாவது
1.கண்ணால் பார்க்கின்றோம்
2.அந்த உணர்வால் உணர்கின்றோம்
3.உணர்ச்சியால் இயக்குகின்றோம்
4.உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

நமக்குக் கோபம் வந்தவுடன் அந்த ஆத்திரம் வந்து நம்மை இயக்குகிறது. கோபம் வந்தால் நம்மை எப்படி இயக்குகிறது என்று நமக்குத் தெரிகிறது, ஆனால் அதை அடக்க வேண்டுமா இல்லையா ?

குழந்தைக்கு உடம்புச் சரி இல்லை என்று எண்ணுகிறோம். அதை உணர்வால் அறிகின்றோம் வேதனையான உணர்ச்சி நமக்குள் வந்து “ஐயோ… குழந்தைக்கு இப்படி வந்து விட்டதே…!” என்று பதறுகின்றோம்.

ஆனால் இந்த உணர்வெல்லாம் நம் ரத்தத்தில் சேர்ந்து நமக்குள் தீமையாக விளைகின்றது. இதை அப்போதைக்கப்போது துடைக்க வேண்டுமா… இல்லையா..?

கண்ணிலே பார்க்கும் போது அவன் வேதனைப்படுகிறான் என்று தெரிந்து கொண்டாலும் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று தடுக்க வேண்டும்.

குழந்தை வேதனைப்படுவதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம். நம் கண்ணின் கருவிழி ருக்மணி இங்கே விலா எலும்புகளில் பதிவாக்குகிறது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை அதற்குப் பக்கத்திலேயே அங்கே பதிவாக்க வேண்டும்.

எந்தக் கண்ணால் பார்த்து வேதனையை எடுத்தோமோ அதன் அருகிலேயே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கும் போது இது வலுவாகிறது.

அவனுக்கு உடம்பு நலமாக வேண்டும், அவன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவன் உடல் முழுவதும் படர வேண்டும், அவன் நோய் நீங்க வேண்டும் என்று நமக்குள் இதை உருவாக்கி அதைச் சொல்லாக அவனிடம் சொல்ல வேண்டும்.

1.நாம் சொல்லும் போது அது வாயுவாகப் போகின்றது.
2.காது வழியாகக் கேட்டு குழந்தையை நுகரச் செய்கின்றது.
3.நுகர்ந்த பின் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் அவன் உடலில் எந்த உறுப்பிலே நோய் இருந்ததோ அதற்குள் வாயுவாகச் சென்று
4.அந்த உணர்ச்சியை ஊட்டி
5.நோயைக் குறைக்கும் ஞானத்தை அவனுக்கு ஊட்டுகின்றது.

அதனால் தான் “ஆஞ்சநேயன்” அவன் வாயு புத்திரன்.. என்றும் அந்த வாயு நம் உடலுக்குள் அணுவாக (புத்திரனாக) மாறும் பொழுது “அனுமார்” என்றும் தெளிவாக்குகின்றனர் ஞானிகள்.

அகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி “அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால்” பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்…!

Agastya Sage Rishi

அகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்…!

துருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றவர். இருளை நீக்கி நஞ்சை வென்று மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறியவர். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைச் சொல்லும் போது இப்பொழுது உங்களிடம் என்ன வாசனை வருகின்றது…? என்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் உங்களுக்குத் தகுந்த மாதிரி
1.பல பல பச்சிலை வாசனைகள் வரும்…!
2.ரோஜாப்பூ வாசனை வரும்…!
3.தீமையை நீக்குகின்ற உடலுக்குள் விஷக் கிருமிகளை நீக்குகின்ற பல தாவர இன மூலிகைகளின் வாசனை வரும்….!

வருகின்றதா…?.

ஏனென்றால் அந்த அகஸ்தியன் உணர்வுகளைச் சொல்லப்படும் போது இங்கே நமக்கு முன்னாடி காற்றில் இருக்கிறது. அந்த உணர்வலைகள் உங்கள் ஈர்ப்புக்குள் (சுவாசத்திற்குள்) வந்து சேர்கிறது.

ஆனால் உங்களால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட
1.நுகரும் போது உணர்ச்சிகளால் அறிய முடியும்.
2.புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும்
3.அந்த ஆற்றல்கள் உடலில் ஊடுருவுவதும் அது தெரியும்.

சிலர் மணத்தால் அறியலாம்…. சிலர் உணர்வால் அறியலாம்…. சிலர் உணர்ச்சியால் அறியலாம்….! அதாவது உணர்ச்சி என்கிற போது உடலுக்குள் அது இயக்கச் சக்தியாக மாறும்.

அப்போது நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வரும். உங்களுக்குள் அது வந்து சேர்கின்றது. சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா….!

உதாரணமாக நேரம்… காலம்… என்ற நிலையில் ஜாதகக்காரன் ஜோசியக்காரன் சொன்னதை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொண்டோம் என்றால் அது நமக்குள் விளைந்து அதுவாகின்றோம்.

தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் உணர்வை நமக்குள் பெற்றால் நாமும் ஞானியாகின்றோம்.

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பார்க்கும் போதெல்லாம் ஞானிகளின் உணர்வை நுகர்வதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும்.

மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் எல்லாம் சொல்லி கேட்டு முடித்தவுடனே “டக்…” என்று புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று சொல்லி நிறுத்திப் பழக வேண்டும்.

ஆனால் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே…!” என்று நாம் சொன்னால் பதிவான வேகத்தைக் கொண்டு
1.பார்…! ஏதோ இப்படிப் பண்ணிக் கொண்டு இருக்கின்றார் என்று நான்கு பேரிடம் சொல்வார்கள்
2.இவரைப் பாருங்கள்… ஏதாவது சொன்னால் ஒன்றுமே கேட்க மாட்டார் என்பார்கள்.
3.ஏன்….? இவருக்கெல்லாம் ஒரு காலத்தில் எந்தக் கஷ்டமும் வராதா..? என்று கூடிப் பேசுவார்கள்.
4.அப்போது கூடிப் பேசும் போது அந்த உணர்வு நம்மைப் பாதிக்கும்.
5.அந்த நான்கு பேருடைய பகைமையை வாங்கினால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றும்.

ஆகையினால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்குள் வராமல் “தடுக்க வேண்டும்….!”

முதலில் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்து நமக்குள் (மனதிற்குள்) வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து அவர்களைப் பார்த்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும்.
3.உங்கள் உடம்பு நன்றாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.

இப்படி அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி இதை மாற்றி அமைத்து நாம் உயர்ந்த சொல்லாகச் சொல்லப்படும் போது நாம் சொல்வது அவர்கள் கஷ்டத்தை நீக்கும் செயலாக இயங்கத் தொடங்கி விடுகின்றது.

இது எல்லாம் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருள் நெறிகள். நம்மைக் காக்கின்றோம். மற்றவரையும் காக்கும் சக்தியாக நம் செயல்கள் அமைகின்றது.

ஞானிகள் செயலாக நம் செயல்கள் ஒன்றுபடுகின்றது…!