அகஸ்தியன் – துருவன் ஆற்றல்கள் எப்படிக் காலத்தால் மறைந்தது…?

அகஸ்தியன் - துருவன் துருவ நட்சத்திரம்

அகஸ்தியன் துருவன் ஆற்றல்கள் எப்படிக் காலத்தால் மறைந்தது…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றிப் பல தடவை சொல்லியுள்ளோம்.

காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டு விலங்குகளில் இருந்து தப்பிக்கப் பல விதமான பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துத் தங்கள் உடலில் பூசிக் கொள்கிறார்கள்.

பாம்பினங்களோ மற்ற மிருகங்களோ இவர்கள் உடலில் பூசிய மணத்தை நுகர்ந்தபின் விஷத்தன்மை ஒடுங்கி விலகிச் செல்கிறது. யானைகளும் மூர்க்கத்தனமாகத் தாக்கி உணவாக எடுக்கும் நிலைகளில் இந்தப் பச்சிலையின் மணம் பட்ட பின் அந்த விஷத்தின் தன்மை ஒடுங்குகின்றது.

இரவிலே குகைகளில் படுத்திருக்கும் போதும் பச்சிலைகளையும் மூலிகைகளையும் பரப்பி வைத்துக் கொள்கிறார்கள். மற்ற உயிரினங்கள் இரை தேடி வந்தாலும் இதை நுகர்ந்த பின் இது மயக்கமடைந்து இவர்கள் பக்கம் வராது வேறு பக்கம் சென்று விடுகிறது. அவர்கள் பயமின்றித் தூங்குகின்றார்கள்.

சந்தர்ப்பத்தால் கருவுறும் சமயம் இவர்கள் பூசிய முலாம்களைக் கருவிலே உருவாகும் அந்த குழந்தைக்கும் போய்ச் சேர்கின்றது. நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணைந்து நஞ்சை நீக்கிடும் அணுக்களாகப் பெறுகின்றது.

இப்படி உருவான குழந்தை (அகஸ்தியன்) பிறந்த பின் சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

சூரியனை நம்மால் காண முடியவில்லை… கண் கூசுகின்றது. ஆனால் அகஸ்தியனோ சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணுகின்றான். மோதலில் ஒளிப் பிளம்புகள் வருவதை இவன் உற்றுப் பார்த்து அந்தப் பிஞ்சு உள்ளத்திலே சிரிக்கின்றான். மகிழ்கின்றான்.

பிரபஞ்சத்தின் உணர்வுகள் அதன் தொடர் அலை வரிசையில் எங்கு செல்கின்றதோ பிரபஞ்சத்தைப் பற்றியும் இளம் பருவத்திலேயே அவன் உணர்கின்றான்.

அவன் மகிழ்கின்றான். ஆனால் சொல்லால் வெளிப்படுத்தும் நிலை இல்லை.

1.நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதும்
2.அதனின் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் போது மத்தாப்பு போல ஒளி அலைகளாக மாறுவதையும்
3.ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வுகள் மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதையும்
4.வான வீதியில் நடக்கும் இந்த அதிசயங்களை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.
5.விஷத்தை அடக்கிடும் உணர்வின் ஆற்றலை அவன் பெறும் போது
6.நுகரும் உணர்வுகளை அவன் உயிர் ஞானத்தின் வழித் தொடரிலே இயக்கி
7.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அவனுக்குள் விளைகின்றது.
8.நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அகஸ்தியனைத் தூக்கிக் காடுகளுக்குள் சென்றால் மற்ற மிருகங்களோ யானையோ புலியோ பாம்போ மற்ற விஷ வண்டுகளோ இவர்கள் அருகிலே வருவதில்லை.

தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதுங்கி வருவதும் இவனுக்குப் பின் வருவதும் போன்ற நிலையாகின்றது. இவன் ஓர் அரசன் ஆகின்றான்.

தன் ஐந்தாவது வயதில் நம் பூமி கவரும் துருவத்தின் ஆற்றலை அறிகின்றான். அகஸ்தியன் துருவனாகின்றான்.

ஆனால் காவியங்களில் காட்டும் பொழுது அந்தத் துருவனை ஒரு அரசனாகப் பிற்காலங்களில் காட்டிவிட்டார்கள். அதற்குப் பின் அவனின் சரித்திரம் இருக்காது.

அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று அவனை அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர அந்தத் துருவன் துருவ மகரிஷியாகி எவ்வழியில் விண்ணுலகம் சென்றான் என்ற நிலைகள் இல்லை.

ஆனால் இந்தக் காவியங்களை எல்லாம் (புலையர்…) “புலஸ்தியர்..” தான் வெளி உலகிற்குச் சொன்னார் என்று சொல்வார்கள்.

ஓர் அரசனுக்கு இரண்டு மனைவி. இரண்டு பேருக்கும் அவரவர்களுக்கு குழந்தை உண்டு.

ஒரு அரசி தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் பொழுது அதே சமயத்தில் இன்னொரு தாயின் மகன் தன் தந்தையிடம் வந்து அது அமர்ந்து அது கொஞ்ச வேண்டும் என்று உணர்வுகள் வரப்படும் போது இந்தத் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் வெறுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான். அங்கே தனித்துத் தவம் இருந்தான் என்று உண்மையின் இயக்கங்களை நாம் அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் (அகஸ்தியனின்) இயக்கத்தை நாம் அறிந்திடாது அரசருக்குகந்த நிலைகளாகப் பல நிலைகளைச் சொல்லி அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் காவியங்களைப் படைத்து மகாபாரதம் இராமயாணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

கந்த புராணம் சிவ புராணம் என்று வந்தாலும் அதில் அகஸ்தியன் கணபதியை வணங்கினார். அதனால் அவருக்கு அதீத சக்தி ஏற்பட்டது. வாதாபி கணபதியை அகஸ்தியன் வணங்கியதால் அவரை யாரும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படித்தான் பறைசாற்றி விட்டார்கள்.

அகஸ்தியர் பெற்ற ஆற்றல்களை முழுமையும் காட்டாதபடி காவியத் தொகுப்புகளில் ஒவ்வொருவரும் அவரவருக்கு தக்கவாறு வெளிப்படுத்தி விட்டனர்.

1.பல பல நூல்களைப் படித்தவர்கள் உண்மையின் நிலைகள் உணராது
2.தான் படித்ததே… தனக்குத் தெரிந்ததே “பெரிது” என்று வாதிட்டுக் கொண்டு
3.அவர்கள் முன் மொழிவதைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாகச் செயல்படுத்தி விட்டார்கள்

அகஸ்தியர் அந்த மந்திரத்தை ஜெபித்தார் அந்த ரிஷி இந்த மந்திரத்தை ஜெபித்தார் என்று மனித உடலில் உருவான உணர்வை எடுத்து அந்த உணர்வுகள் பதிவான பின் அவன் இறந்தால்
1.இதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபித்தால்
2.அந்த ஆன்மாவைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகச்
3.சாகாக்கலையாக உருவாக்கி விட்டார்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமாகப் பெற்ற அந்த “வேகா நிலைக்கு” ஒவ்வொருவரையும் அழைத்துச் செல்லும் மார்க்கத்தையே மாற்றி விட்டார்கள்.

Leave a Reply