இரவு படுக்கையில் தூங்கும் முன் தியானம் செய்ய வேண்டிய முறை – “பறக்கும் நிலை”

பறக்கும் நிலை

இரவு படுக்கையில் தூங்கும் முன் தியானம் செய்ய வேண்டிய முறை – “பறக்கும் நிலை”

 

இரவு தூங்கச் செல்லும் போதெல்லாம் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை எண்ணுங்கள்.

காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனை பேரைப் பார்த்தீர்களோ அவர்களுக்கெல்லாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நாம் எத்தனை பேரை சந்தித்தோமோ அவர்களெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதை நாம் எண்ணி ந்த உணர்வை நமக்குள் வளர்த்து கொண்டால் அது நமக்குள் அணு தினமும் விநாயகர் “சதுர்த்தி…” தீமை என்ற நிலைகள் நிறுத்தப்படுகிறது.

கண்களைத் திறந்தே எண்ணி எடுக்கவேண்டும். பிறகு புருவ மத்தியில் எண்ணும் பொழுது தானாகவே கண்களை இறுக்கி மூடச் செய்யும். நீங்கள் கட்டாயப்படுத்தி கண்களை மூடவேண்டாம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி இதை உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்தி உங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வை எண்ண வேண்டும். பெருகியபின் நம் ஆன்மா தூய்மை ஆகும்.

என்னுடன் தொழில் செய்பர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். நாங்கள் தொழில் செய்த இடங்களில் பார்த்துப் பழகிய அத்தனை பேரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலமாக இருக்கவேண்டும்.

இப்படி எண்ணினால் இதற்குப் பெயர் தவம்.

தெய்வத்தை எண்ணித் தவமிருப்பதைவிட ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து மற்றவர்கள் அதைப் பெறவேண்டும் என்று இதைத் தவமாக்க வேண்டும்.

மனிதனை உருவாக்கிய அந்த நல்ல உணர்வுகளுக்கெல்லாம் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது தவமாக மாறுகின்றது.

இரவு முழுவதும் நீங்கள் எண்ண வேண்டும்.

தொழில் செய்யும் போது நம்மிடம் வியாபாரம் வாங்கிச் சென்றவர்களுக்கும் நாம் யார் யாரை எங்கெங்கெல்லாம் அன்றைய வாழ்க்கையில் பழகினோமோ அவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.அப்படியே அந்த நினைவை வைத்துக் கொண்டே தூங்க வேண்டும்.
2.நீங்கள் சிறிது காலம் இதைச் செய்து பழக்கப்படுத்தினால்
3.அந்த வான மண்டலத்தில் மிதப்பது போல அந்த உணர்வு வரும்
4.சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்ளும்.

யார் யாரையெல்லாம் பார்த்து அதனால் வேதனைப்பட்டு நமக்கும் நோயானதோ அந்த நோயெல்லாம் குறையத் தொடங்கும். காலையில் எழும் பொழுது ஒரு உற்சாக உணர்வு வரும்.

அன்றாடக் காரியங்கள் மகிழ்ச்சியாக நடக்கும். நமக்குள் சோர்வோ சஞ்சலமோ வராது.

இரவு படுக்கப்போகும் போதும் காலை எழுந்திருக்கும் போதும் பின் வெளியிலே வேலைக்குச் செலலும் பொழுதும் இதை எல்லாம் வரிசைப்படுத்தி எண்ண வேண்டும்.

செய்து பாருங்கள்…!

ஞானிகளால் வைக்கப்பட்டுள்ள தெய்வச் சிலையின் மகிமையை அறிந்திருக்கின்றோமா…!

பழனியாண்டவர்

ஞானிகளால் வைக்கப்பட்டுள்ள தெய்வச் சிலையின் மகிமையை அறிந்திருக்கின்றோமா…! 

ஒருவர் கஷ்டமாக இருப்பார் நஷ்டமாக இருப்பார் வேதனைப்பட்டு இருப்பார் துன்பப்பட்டு இருப்பார் துயரப்பட்டு இருப்பார் எல்லாம் பட்டிருப்பார்.

ஆனாலும் இங்கே கோவிலுக்குள் போனவுடன் அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து ஒருங்கிணைக்க வேண்டும்.

எப்படிக் குழம்பு வைக்கும் பொழுது எல்லாம் ஒன்றாகச் சேர்த்துச் சுவையாக இருக்கின்றதோ இதைப் போல நாம் துன்பத்தை நீக்கி இன்பத்தின் நிலைகள் பெறவேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த நிலைகளில் சொல்லி கோவிலுக்குள் ஒலிபரப்பும் பொழுது அங்கே எதிரொலிக்கும்.

எப்படி..?

ஒரு மேக்னட்…! (காந்தம்). அதாவது மலைகளிலே அதிகமாக உயரமாக வளர்ந்து தன் காந்தத்தின் நிலையாக இழுக்கப்பட்டு நெடு நெடு என்று வளர்ந்திருக்கும். அதே சமயத்திற்குள் அந்தக் கல்லுக்குள் மறைந்த நிலையில் காந்த அலைகளும் பதியப்பட்டு இருக்கும்.

அத்தகைய மலைகளில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு தான் ஆலயத்தில் தெய்வச் சிலையாக வைத்துள்ளார்கள் ஞானிகள்.

கோவிலுக்குள் சென்று நாம் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் இடும் இன்பமான அலைகள் அங்கே படரப்பட்டு சிலையின் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றது.

சாதாரண மக்களும் அந்தச் சிலையைப் பார்த்து எண்ணியதும் அந்த உயர்ந்த சக்தியைப் பெறச் செய்வதற்காக வேண்டி அந்த மெய்ஞானி ஆலயத்தை அவ்வாறு அமைத்தான்.

கோவிலுக்குள் போனவுடன் தீபாராதனை காட்டுகின்றார்கள். இருட்டறைக்குள் சாமி இருக்கின்றது.

நம் உடலுக்குள் மறைந்திருக்கும் நல்ல குணம் அதைப் பார்க்கப்படும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணி நாம் ஏங்கவேண்டும்.

சாமி மேலே நறுமணமான மலர்களைப் போட்டிருப்பார்கள்.

எனக்குள் நல்ல குணத்தைத் தெய்வமாக உருவாக்கி இந்த உடலுக்குள் நீ எந்த மணம் பெற வேண்டும் என்று காட்டுவதற்காக மலரைப் போட்டிருக்கிறார்கள்.

மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்கள் பேச்சும் மூச்சும், நறுமணங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது, இந்த உடலிலே நறுமணம் வருகின்றது.

ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இப்படி ஏகோபித்த நிலைகள் ஒவ்வொருவரும் எண்ணும்படி வைத்துள்ளார்கள் அன்றைய ஞானிகள்.

இதையெல்லாம் நான் (ஞானகுரு) சொல்லவில்லை. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னது.

நான் படிக்கவில்லை. எமக்குக் கோவிலைப் பற்றியும் தெரியாது. இந்த ஸ்தல விருட்சத்தைப் பற்றியும் தெரியாது. அவர் சொன்னதைத் தான் உங்களிடம் சொல்லுகின்றோம்.

குருநாதர் எம்மிடம் கோவிலுக்குப் போனால் இப்படித்தான் கும்பிட வேண்டும் என்றார்.
1.நாம் அந்த எண்ணத்தை எடுக்கும் பொழுது தெய்வமாகின்றது.
2.எண்ணிய எண்ணம் இறையாகின்றது இறைவானாகின்றது.
3.அந்த உணர்வின் சக்தி நமக்குள் தெய்வமாகின்றது.
4.அந்த செயலின் தன்மையாக நாம் ஆகின்றோம் என்ற செயலின் தன்மையை குருநாதர் சொன்னார்.

அதைத்தான் யாம் உங்களிடம் சொல்லுகின்றோம்.

காலையில் தியானம் செய்யும் முறை – பிரம்ம முகூர்த்தம்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்

காலையில் தியானம் செய்யும் முறை – “பிரம்ம முகூர்த்தம்”

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் அரும்பெரும் சக்திகளைப் பெறுவதற்காக அதிகாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ தியானம் செய்ய வேண்டும்.

எழுந்து வசதியாக உட்கார்ந்து செய்யவும் செய்யலாம். படுக்கையில் விழிப்பு வந்தபின்
1.நேரடியாகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் தொடர்பு கொண்டு
2.புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் எண்ணத்தைச் செலுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெரொளி உடல் முழுவதற்கும் படரவேண்டும் என்று உள் முகமாகச் செலுத்த வேண்டும்.

உள் முகமாகச் செலுத்தச் செலுத்த நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொண்டு இருக்கும்.

காலையில் நீரை ஊற்றி நம் உடல் அழுக்கைப் போக்கக் குளிக்கின்றோமோ அதைப் போல ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் இப்படிச் செலுத்த வேண்டும்.
1.உடலுக்குள் வலு பெறச் செய்து தான்
2.ஆன்மாவில் உள்ள தீமைகளை நீக்க வேண்டும்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் வலு பெற்றால் அதனின் உணர்வு நம் ஆன்மாவாகி நாம் சுவாசிக்கும் போது வேதனையின் எண்ணங்கள் தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தே ஆகவேண்டும். உங்களைக் காக்க இந்த எண்ணம் உங்களுக்கு உதவும்.

நான் சொல்வது கொஞ்சம் சிக்கலாகவும் தெரியும். கடினமாகவும் தெரியும். பதிய வைத்து விட்டால் சந்தர்ப்பம் வரும் போது நினைவிற்கு வரும்.

பள்ளிக்கூடத்தில் போய் நாம் பாடத்தைப் படித்தவுடனே எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது இல்லை. அதைத் திரும்பத் திரும்பப் படிக்கும் போது தான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகின்றது.

ஒரு தடவை பதியச் செய்து விட்டாலும்
1.அதைப் பெற வேண்டும் என்று எண்ணம் இருந்தால் தான்
2.திரும்பத் திரும்ப நாம் மனதில் பதிவு செய்வோம்.
3.அதை வளர்ப்போம்.

ஏனென்றால் இரண்டு சூடத்தையும் தேங்காயையும் பழத்தை விநாயகருக்குக் கொண்டு போய் வைத்து இரண்டு அருகம்புல்லையும் கொடுத்துவிட்டால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்கிற நினைவில் நாம் இருந்தவர்கள். அந்தப் பழக்கத்தில் இருந்ததால்
1.ஒரு நிமிடத்தில் எண்ணி
2.எங்கேயோ இருக்கக்கூடிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுகின்றோம் என்று
3.இப்படிச் சொல்கிற பொழுது இது கொஞ்சம் கடினமாக இருக்கின்றது.
4.ஆனால் அதைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு கொடுக்கின்றோம்.

நல்ல வித்தைக் கொடுத்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலையில் தான் இருக்கின்றது.

இதற்கு முன்னாடி நாம் இதையெல்லாம் செய்யாமல் இருந்தாலும் கூட இப்பொழுது அந்த அருள் ஞானிகளின் ஞான வித்தைக் கொடுக்கின்றோம்.

அதை முறைப்படி பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் சரியாக நான்கு நான்கரை மணிக்கெல்லாம் அவசியம் விழிப்பு வரும்.

அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். எழுந்து உட்கார்வதற்கு உங்களுக்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும்
1.உங்கள் எண்ணத்தை நேராகத் துருவ மகரிஷிக்கு அனுப்புங்கள்.
2.அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

காலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகள் நமக்குள் ஒளிக் கதிராக வருகின்றது. அதை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலு சேருங்கள்.

உங்கள் கண்ணின் நினைவை விண்ணிற்குச் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் நினைவை உயிருடன் ஒன்றி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

பத்து நிமிடத்திலிருந்து அரை மணி நேரமாவது செய்ய வேண்டும்.உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த ஆன்மா தூய்மை அடையும். உடல் நலம் பெறுவீர்கள்.

எந்த அளவுக்கு நன்னீரை விட்டுக் குளிக்கின்றீர்களோ இதைப் போல அருள் ஞானியின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சிருஷ்டியாக்கும் நேரம் என்று பொருள்.

மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்”

Image

Tap root for Spirituality

மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்”

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் உணர்வைத் தன்னுள் கண்டுணர்ந்து இந்த மண்ணுலகை வென்று விண்ணுலகைச் சென்றடைந்து முழுமை பெற்றார்.

விண் செல்வதற்குண்டான பாதையை அவர் கற்றார். இந்த உணர்வை முழுமை பெறுவதற்குத் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணினார்.

அந்தத் துணையைத் தான் பெற்றாலும் விண்ணுலகம் செல்வதற்கு விண்ணிலே உந்தித் தள்ளுவதற்கு தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.
1.விழுதுகள் இல்லாது மரம் வளர்ந்திடாது
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.
3.அதே போலத்தான் ஒவ்வொரு உயிருக்கும் விழுதுகள் தேவை.

நாம் எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு விண் சென்ற மகா ஞானிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் எடுத்து அந்த விழுதுகளாக நாம் ஓவ்வோருவரும் உருவாக வேண்டும்.
1.உங்களுக்கு நான் விழுது
2.எனக்கு நீங்கள் விழுது என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.

விழுது இல்லாது ஒன்றின் துணை இல்லாது ஒன்று விளையாது என்ற நிலையைக் குருநாதர் தெளிவாகக் காட்டினார். அதே சமயத்தில்
1.நான் மட்டும் தனித்துத் பெறுவேன்.
2.மற்ற அனைத்தையும் வெறுப்பேன் என்ற நிலையில் பெற இயலாது.

அன்று அகஸ்தியன் தனக்குள் அனைத்தையும் இணைத்துத்தான் ஒளியாக்கினார்.
1.வருவதைத் தனக்குள் அரவணைத்துத்
2.தீங்கு செய்யாது அதை அடக்கினார்.

அதனால் தான் எதையுமே ஒளியாக மாற்றும் திறன் பெற்றார் அப்படிப் பெற்ற அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது நிச்சயம் நாம் அனைவரும் அதைப் பெறலாம்.

இதை எல்லாம் “துணுக்குத் துணுக்காகச் சொல்கிறேன்…!” என்று எண்ண வேண்டாம்.

இதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் நினைவாக்கும் பொழுது சந்தர்ப்பத்தில் தீமைகளைப் போக்கும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு பெறவேண்டும் என்பதற்காகத்தான் தெளிவாக்குகின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படிப் போதித்தாரோ…? மகரிஷிகளின் உணர்வுகளை நான் பெறும்படி எப்படிச் செய்தாரோ…? அவ்வாறே நீங்களும் பெறவேண்டும். பெற முடியும் என்ற அந்த நம்பிக்கையில் சொல்லுகின்றேன்.

1.உங்கள் நினைவலைகள் கூர்மையாக இருக்க வேண்டும்.
2.கூர்மையாக ஆக்க உபதேசிக்கும் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
3.பதிந்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும்.
4.அந்த நினைவின் ஆற்றல் உங்களை வளர்க்கும்.
5.முதலில் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்
6.பின் அது உங்களை வளர்க்கும்
7.அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
8.அருள் வழியில் அழைத்துச் செல்லும்.