உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்

Image

உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – “கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்”

 

நாம் சங்கடமாக எண்ணினாலும் துன்பமாக எண்ணினாலும் இந்த உணர்வின் தன்மை உயிரிலே படும்போது இந்த உணர்வின் நிலைகள்தான் நம்மை இயக்கிவிடுகின்றது.

அதனால் இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய நம் ஈசனுக்கே கெடுதல் செய்கின்றோம். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கோபமான நிலைகளையோ வெறுப்பான நிலைகளையோ அல்லது ஆத்திரமான உணர்வுகளையோ நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரில் பட்டுத்தான் அதற்குப் பின் வெளியிலே நாம் சொல்கின்றோம்.

யாரைத் திட்டினாலும் முதலில் நாம் தான் அனுபவித்துக் கொள்கின்றோம். கீழே சேறு இருக்கிறதென்றால் அந்தச் சேற்றைக் கையில் அள்ளும் பொழுது முதலில் நாம் அசிங்கப்படுகின்றோம்.

இதைப் போலத்தான் ஒருவன் கெட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் எடுத்துக் கொண்டால் முதலில் நமக்குள் தான் அந்த உணர்வுகள் சாடி நம் உடலுக்குள் நல்ல குணங்கள் அனைத்துமே கெடுகின்றது.

1.முன் பகுதி தெரியாது

2.பின் பகுதி நம் உடலுக்குள் அழுகிய சரீரமாக உண்டாக்கி

3.அந்த வேதனையின் தன்மையைப் பார்க்கலாம்.

ஏனென்றால் உயிர் பிரம்மம். யாரை ஏமாற்றினாலும் உயிரான ஈசனிடம் ஏமாற்ற முடியாது. நாம் கொடுத்ததைப் பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டித்துவிடுவான்.

மெய் ஞானிகளின் அருள் ஒளியைச் செலுத்தினால் தான் தீமைகளை அகற்றி உயிரான பிரம்மனிடத்தில் மகிழ்ச்சியை ஊட்ட முடியும்.

யார் சங்கடமான நிலைகளைச் சொன்னாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை நாம் சுவாசித்து இந்த ஒளியினைப் பாய்ச்சும் பொழுது

1.பிறருடைய உணர்வுகள் தீயதாக இருந்தாலும்

2.அதை மாற்றும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

“வள்ளியைத் திருமணம் செய்து கொள்” என்று விநாயகர் முருகனிடம் சொல்கிறார் – வள்ளி திருமணம்

Image

valli murugan

“வள்ளியைத் திருமணம் செய்து கொள்” என்று விநாயகர் முருகனிடம் சொல்கிறார் – வள்ளி திருமணம்

 

முருகனுக்கு இரண்டு சக்திகள் இச்சா சக்தி கிரியா சக்தி என்பது அன்று ஞானிகள் சொன்ன பேருண்மையினுடைய நிலைகள்.

அதாவது வள்ளி – வலிமை மிக்க சக்தி நம் உடலிலிருந்து வரக்கூடியது ஆறாவது அறிவு. வள்ளி திணைக் காட்டிலே காவல் இருக்கின்றாள்.

தான் விளைய வைத்ததை மற்ற குருவிகள் கொத்திச் சாப்பிட்டுப் போகாமல் அதைப் பாதுகாக்கின்றாள்.

அதைப் போல இந்த மனித உடலில் நாம் எத்தனையோ  கோடிச் சரீரங்கள் எடுத்த நமக்குள் சேர்த்திருக்ககூடிய நல்வினையைக் காக்கும் நிலையான திணைக்காட்டில் காவல் இருக்கும்போது குருவியை எப்படி விரட்டுகின்றாள்?

இதைப் போல நம் உடலில் வளர்த்த நல்லுணர்வைக் காக்கக்கூடிய உணர்வை நாம் சுவாசிக்கும்போது நம் உயிரிலே பட்டவுடன் தெய்வ ஆணை.

நாம் சுவாசித்தது இந்த உடலில் தெய்வமாக மாறி அந்த ஆணைப்படிதான் நம்மை செயலாக்குகின்றது. இதுதான் வள்ளி தெய்வானை.

வள்ளி திருமணத்தில்oooooooo இன்னொன்றையும் காட்டியிருக்கிறார்கள்.

முருகனுக்கு அண்ணன் விநாயகர்.  அந்த ஆதிமூலத்திலிருந்து  தோன்றிய ஆறாவது அறிவான சக்தியைத் தான்  நமக்குள் இது காப்பாற்றும் அலைகளாக இருக்கின்றது

1.‘’இதை நீ கல்யாணம் செய்து கொள்’’

2.உன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய உணர்வாக எடுத்துக் கொள் என்று

3.உடலிலிருந்து வந்த வலிமையான (வள்ளி) சக்தியைக் காட்டினார்கள்.

வள்ளி திருமணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகிறார்கள், பச்சையாகவே காட்டுகிறார்கள். அதை உணர்ந்து கொள்வார் யாருமில்லை.

ippadiஇப்படி ஆகிவிட்டதே என்று சோர்வடைவதை விட அருள் சக்திகளைச் சுவாசித்து தன்னையும் காக்க வேண்டும் பிறரையும் காத்திடும் நிலை வர வேண்டும் என்பதற்கே அவ்வாறு காட்டுகிறார்கள்.