“வள்ளியைத் திருமணம் செய்து கொள்” என்று விநாயகர் முருகனிடம் சொல்கிறார் – வள்ளி திருமணம்

valli murugan

“வள்ளியைத் திருமணம் செய்து கொள்” என்று விநாயகர் முருகனிடம் சொல்கிறார் – வள்ளி திருமணம்

 

முருகனுக்கு இரண்டு சக்திகள் இச்சா சக்தி கிரியா சக்தி என்பது அன்று ஞானிகள் சொன்ன பேருண்மையினுடைய நிலைகள்.

அதாவது வள்ளி – வலிமை மிக்க சக்தி நம் உடலிலிருந்து வரக்கூடியது ஆறாவது அறிவு. வள்ளி திணைக் காட்டிலே காவல் இருக்கின்றாள்.

தான் விளைய வைத்ததை மற்ற குருவிகள் கொத்திச் சாப்பிட்டுப் போகாமல் அதைப் பாதுகாக்கின்றாள்.

அதைப் போல இந்த மனித உடலில் நாம் எத்தனையோ  கோடிச் சரீரங்கள் எடுத்த நமக்குள் சேர்த்திருக்ககூடிய நல்வினையைக் காக்கும் நிலையான திணைக்காட்டில் காவல் இருக்கும்போது குருவியை எப்படி விரட்டுகின்றாள்?

இதைப் போல நம் உடலில் வளர்த்த நல்லுணர்வைக் காக்கக்கூடிய உணர்வை நாம் சுவாசிக்கும்போது நம் உயிரிலே பட்டவுடன் தெய்வ ஆணை.

நாம் சுவாசித்தது இந்த உடலில் தெய்வமாக மாறி அந்த ஆணைப்படிதான் நம்மை செயலாக்குகின்றது. இதுதான் வள்ளி தெய்வானை.

வள்ளி திருமணத்தில்oooooooo இன்னொன்றையும் காட்டியிருக்கிறார்கள்.

முருகனுக்கு அண்ணன் விநாயகர்.  அந்த ஆதிமூலத்திலிருந்து  தோன்றிய ஆறாவது அறிவான சக்தியைத் தான்  நமக்குள் இது காப்பாற்றும் அலைகளாக இருக்கின்றது

1.‘’இதை நீ கல்யாணம் செய்து கொள்’’

2.உன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய உணர்வாக எடுத்துக் கொள் என்று

3.உடலிலிருந்து வந்த வலிமையான (வள்ளி) சக்தியைக் காட்டினார்கள்.

வள்ளி திருமணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகிறார்கள், பச்சையாகவே காட்டுகிறார்கள். அதை உணர்ந்து கொள்வார் யாருமில்லை.

ippadiஇப்படி ஆகிவிட்டதே என்று சோர்வடைவதை விட அருள் சக்திகளைச் சுவாசித்து தன்னையும் காக்க வேண்டும் பிறரையும் காத்திடும் நிலை வர வேண்டும் என்பதற்கே அவ்வாறு காட்டுகிறார்கள்.

Leave a Reply