நம் அன்றாட வாழ்க்கையில் வரும் பகைமையான உணர்வுகளை அகற்றிப் பழக வேண்டும்

நம் அன்றாட வாழ்க்கையில் வரும் பகைமையான உணர்வுகளை அகற்றிப் பழக வேண்டும்

தினசரி நாம் உடல் அழுக்கைப் போக்கி விடுகின்றோம். துணிகளில் பட்ட அழுக்கினைத் துவைத்து விடுகின்றோம்.

ஆனால் நம் உணர்வுகளில் (ஆன்மாவில்) படும் அழுக்குகளைப் போக்க ஞானிகள் காட்டிய முறையைக் கடைபிடிக்கத் தவறி விட்டோம்.

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ நிலைகளில் குடும்பத்திலும் சரி தொழிலும் சரி வேலை பார்க்கும் இடங்களிலும் சரி
1.ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.
2.நம் மன அமைதியைக் குலைத்து விடுகின்றது.

சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே அந்த எண்ணங்கள் நமக்குள் மேலோங்கி வந்து சிந்தித்துச் செயல்படும் நல்ல உணர்வுகளை மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் பிறர் மேல் உள்ள பகைமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதை வளர்க்க வளர்க்க இந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற வலுப் பெற நம்மை எண்ணும்போதெல்லாம் கடும் ஆயுதமாக அவர்களை மாற்றும்.

இதை நுகர்ந்தார்கள் என்றால் அவர்கள் அறிவின் நிலையை மடக்கும். அங்கே தீமையின் நிலையை செயலற்றதாக மாற்றும்.

அவர்கள் சிந்தித்தால் சிந்தித்த வினையின் தன்மை கொண்டு நன்மை அடைவார்கள். இல்லையென்றால்
1.அவருக்குள் விளைந்த உணர்வுகள் அனைத்தும் ஒடுங்கி
2.பிறப்பின் உண்மையை அவர்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
3.இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

இந்த மனித வாழ்க்கையில்
1.நாம் தீமையைப் பார்க்காமல் இருக்க முடியாது.
2.தீமை என்று உணரவில்லையென்றால் தீமையில் இருந்து விடுபட முடியாது.
3.ஆனால் தீமையை நுகரும் பொழுது அதை ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது நமது உயிர்.

அந்தத் தீமையின் உணர்வுகள் மீண்டும் மீண்டும் நமக்குள் வந்தே சேரும். அப்பொழுதெல்லாம். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிடம் கட்டளையிட்டு அந்த உணர்வின் தன்மையை ஈர்ப்பின் தன்மை இல்லாது துடைத்தல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய முறைப்படி பிறரின் உணர்வுகள் நமக்குள் பதிவாகாதபடி தடைப்படுத்த வேண்டும். சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அடிக்கடி தூய்மைப்படுத்தல் வேண்டும்.

இந்த உணர்வை ஒட்டி வரும் போதுதான் நம்மைக் காத்திடும் நிலையாக வளர முடியும்.

Leave a Reply