“மகரிஷிகளின் உணர்வலைகள்” ஒளிக்கற்றைகளாக உங்களுக்குள் இணைவதைக் காண முடியும்

Violet Flame rays

“மகரிஷிகளின் உணர்வலைகள்” ஒளிக்கற்றைகளாக உங்களுக்குள் இணைவதைக் காண முடியும்

 

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைக்கப்படும் பொழுது

1.அந்த நஞ்சினை ஒளியாக மாற்றி அறிவின் ஞானமாகவும்

2.இந்த மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும்

3.அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது.

 

அதைப் பெறச் செய்வதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

 

ஆகவே மறவாதீர்கள். உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

 

இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.

 

அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.

 

யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.

 

ஒவ்வொரு நொடியிலேயும் சங்கடங்களோ சலிப்போ மற்ற தீமைகள் வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி

1.உங்கள் ஏக்கத்தை விண்ணை நோக்கிச் செலுத்துங்கள்.

2.இலேசாக உங்கள் எண்ணத்தை உயர்வாக (மேல் நோக்கி) எண்ணுங்கள்.

3.இப்பொழுது உங்கள் எண்ணம் ஆன்மாவைக் கடந்து செல்கின்றது.

4.மேல் நோக்கிய நிலைகளில் ஆன்மாவைக் கடந்து நுகரப்படும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை நுகர முடியும்.

 

அமைதியாக இருக்கும் தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால் அலைகள் தனக்குள் அலை அலைகளாக மாறுகின்றது. இதைப் போல

1.மகரிஷிகளின் உணர்வின் அலைகள் உங்களுக்குள் வருவதை

2.அந்த ஒளிக்கதிர்களை உங்களால் உணர முடியும்.

3.கண்களால் பார்க்கவும் முடியும்.

 

உங்கள் ஆன்மாவில் பட்ட தீமைகளை இது அகற்றும். உங்கள் உடலுக்குள் ஊடுருவி ஒளியான உணர்வின் ஆற்றல் பெருகும். இதை உங்களால் நுகர முடியும்.

 

ஆனால் அதே சமயத்தில் அதிகமாகக் காட்சிகளைக் கொடுத்துவிட்டால் பயப்படுவோர் நிறைய உண்டு.

 

“ஐய்யோ.., திடீர் என்று என்னமோ தெரிகின்றது. இதனால் என்ன ஆகுமோ…?” என்று எண்ணுவார்கள்.

 

1.கிடைப்பதைப் பற்றிச் சந்தோஷப்பட்டு

2.”மேலும் பெறவேண்டும்” என்று எண்ணுவது ஒரு சிலரே.

 

ஆனால் பலர் இந்த மாதிரித் தெரிகிறது. இது ரைட்டா…? தப்பா…? இந்தக் கால்குலேசன் (CALCULATION)  போட ஆரம்பித்துவிடுகின்றார்கள்.

1.இதனால் ஏதாவது நல்லதாகுமா…?

2.அல்லது இதனால் கெட்டதாகி விடுமோ…?

 

கிடைத்ததையும் இழக்கும் நிலைகளில் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை இருக்கின்றது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மன பலத்துடன் மகரிஷிகள் கண்டதை முழுமையாக உணர வேண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் அந்த வலிமையைக் கூட்டினால் “உங்கள் வளர்ச்சியை நீங்களே பார்க்கலாம்.”

Leave a Reply