கோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்?

Image

vijaya dhasami - kalki

கோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்?

 

நாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” – விநாயகா.

 

நம் உடலிலே எதன் எதன் வழியில் சுவாசித்து உணர்வின் தன்மை உடலில் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வினைக்கு நாயகனாக அது அது இயங்கத் தொடங்குகின்றது.

 

1.கோபமான உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து

2.அந்த உணர்வின் ஞானமாக அதனின் உணர்ச்சிகள் நமக்குள் செயல்படும் பொழுது

3.கோபமான உணர்வின் அணுக்கள் பெருக்கமாகின்றது.

4.கோபத்தின் அணுக்கள் பெருக்கமானபின் அதனின் ஞானத்தைக் கொண்டு

5.அதையே உணவாக உட்கொள்ளும் ஞானத்தைப் பெருக்குகின்றது.

 

தன் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கோப உணர்ச்சிகள் வருகின்றது. அதற்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யும்…!

 

அதே கோப உணர்ச்சியைத் தூண்டச் செய்து

1.பையனைத் திட்டச் சொல்லும்.

2.நண்பனை வெறுக்கச் சொல்லும்.

3.வியாபாரம் செய்து கொண்டிருந்தோம் என்றால் அதை மறக்கச் செய்யும்.

4.பொருள்களைக் கோபத்தால் வீசி எறியச் செய்யும்.

 

அந்த உணர்ச்சிகள் உணர்வான பின் அந்தச் சூட்சம உணர்வை எடுத்து அந்த அணுக்கள் விளைந்து இந்தக் கணக்குகள் நமக்குள் கூடினால் அந்த வினைக்கு நாயகனாக “இரத்தக் கொதிப்பாக” உருவாகின்றது.

 

இரத்தக் கொதிப்பான பின் எல்லோரையும் நாம் வெறுக்கும் நிலையாகி நம் உடலுக்குள்

1.நல்ல குணங்களை வெறுக்கும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலற்ற நிலைகள் வரும் பொழுது

2.நம் உடலின் அங்கங்கள் குறுக்கப்படும்.

3.நரம்பு சம்பந்தப்பட்ட (வாத) நோய்கள் வரும்

4.அந்த நிலையான பின் நம்மால் உடலால் நடந்து செல்ல முடியாது.

 

முடியவில்லை என்றால் ஒருவரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்போம். எதிர்பார்த்தவுடன் வரவில்லை என்றால் அவன் மீது சீறிப் பாயும் நிலைகள் வரும்.

 

“நம்மால் முடியவில்லை…” என்று அவர் சிரமப்பட்டுக் கொண்டு நமக்காக வந்தாலும்

1.நினைத்த மாத்திரத்தில் வரவில்லை என்றால்

2.வெறி கொண்ட நாயைப் போலத் தாக்கிப் பேசும் உணர்வுகள் தான் வருகின்றது.

 

நம்மால் முடியவில்லை. ஆனால் கோபத்தின் நிலை வரும். அதுவும் முடியவில்லை என்றால் “அழுகை” வரும்.

 

முந்தைய வாழ்க்கையும் இன்றைய நிலைகளும் முடியவில்லை என்ற நிலைகள் சேர்ந்து வெகு நேரம் ஆகிவிட்டால் தேம்பித் தேம்பி அழுகும் நிலை ஆகின்றது.

 

இப்படி இரத்தக்கொதிப்பாகச் சுருங்கிவிட்டால் நண்பன் என்ற நிலைகள் பழகிய உணர்வு பட்டபின் நண்பனைப் பார்க்கும் பொழுது – என் நிலை இப்படி ஆகிவிட்டது… சொல்லால் பேச முடியவில்லை என்றால்…, “அழுகையால் காட்டும் ஞானம்” வருகின்றது.

 

இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

 

நாம் பல கோடிச் சரீரங்களில் தீமையை நீக்கி நீக்கி இன்று மனிதனாக வந்துள்ளோம். மனிதனான பின்

1.நன்மை பயக்கும் நல்ல குணங்களைப் பக்குவப்படுத்துதல் வேண்டும்.

2.அதுதான் சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை.

3.நம் மனதைத் தெளிவாக்கினால் அந்த உணர்ச்சிகள் அந்த ஆயுதமாக மாறி நண்பனைக் காக்கும். அந்த நண்பனும் நம்மைக் காப்பான்.

 

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கொண்டு “கார்த்திகேயா” நாம் தெரிந்து கொள்ளும் அறிவு வருகின்றது. தீமைகளை நீக்கிய உணர்வின் தன்மையை இந்த ஆறாவது அறிவால் அறிய முடிகின்றது.

 

தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றவர்கள் பத்தாவது நிலையில் (விஜய தசமி) துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றி அவர்களைப் போன்று பத்தாவது நிலை அடையும் தன்மையை நினைவுபடுத்தச் செய்யும் நாள் தான் “விஜய தசமி”.

குரு என்பவர் யார்…? குரு அருளைப் பெறுவது எப்படி…? குரு பலம் என்றால் என்ன…?

guru purnima

குரு என்பவர் யார்…? குரு அருளைப் பெறுவது எப்படி…? குரு பலம் என்றால் என்ன…?

உதாரணமாக
1.ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை
2.மாணவன் தான் கூர்மையாக உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கி
3.ஆசிரியர் மேல் பற்று கொண்ட உணர்வின் தன்மையையும் மாணவன் தனக்குள்  பதிவாக்கினால்
4.ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் மாணவனிடத்தில் பரவி
5.அந்த உணர்வே… “ஆசிரியராக” இருந்து
6.இது இவ்வாறு…, இது இந்த நிலை…, என்பது போன்ற சிந்திக்கும் திறனும் செயலும் அதற்குண்டான உணர்வும் வரும்.

இப்படி ஒருவர் கற்றுத் தரும் போதனையைக் கூர்மையாகக் கவனித்து அதன் உணர்வின் தன்மையை எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது.

இதைத்தான் குரு எமக்குக் காண்பித்து எம்முள் பதிவாக்கினார்.

1.தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும்
2.குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும்
3.உலகில் மிக மிக உயர்வானது.

இதில் குருவானவர் தன்  சிஷ்யனுக்கு எதை எப்பொழுது எப்படிக் கொடுப்பது என்பதை நன்கு அறிந்திருக்கிறார்.

ஒவ்வொருவரும் தான் உயர்ந்தவைகளைப் பெற வேண்டும் என்று உயர்ந்த நல் எண்ணங்களை எண்ணி ஏங்கும் பொழுது குரு அருளைப் பெற முடிகின்றது. இதைத்தான் “குரு பலம்” என்று சொல்வது.

உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர் என்ற நிலையில் குருவின் உணர்வின் தன்மையை எமக்குள் பதிவு செய்து கொண்டபின் உலகின் தன்மையையும் கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றும் எமக்கு உணர்த்தினார் குரு.

இப்படி இதன்வழி கொண்டு எண்ணும் பொழுது அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள் எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும் அதன் வழி கொண்டு வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது.

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கிப் பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால் தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகின்றது.

நீங்களும் இதை நுகர்ந்தறிந்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி வாய்ந்த மனிதனாகின்றீர்கள்.

ஆனால் “ஒருவன் என்னை ஏசுகின்றான்…, எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்…” என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு தீமை செய்தவனை எண்ணும் பொழுது என்னவாகும்?

மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து நம்மிடத்தில் கை கால் குடைச்சலாகி சிந்திக்கும் தன்மை இழந்து கோப உணர்வுகள் வருகின்றது.

சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற் பலன் தரவில்லையென்றால் உணர்ச்சியின் தன்மை கூடுகின்றது. கொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது.

கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து கடும் நோயாகவும் மாறுகின்றது.

இதுவும் ஆசிரியராக வருகின்றது. குருவாக வருகின்றது. ஆகவே எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும்.

இதை வென்றவர் துருவ மகரிஷி. அவர் கண்டுணர்ந்த உணர்வை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கற்றுணர்ந்தார்.

விண்ணுலக ஆற்றலின் தன்மையை அவர் வாழ்க்கையில் கண்டறிந்தார். அதனின் நெறி முறைகளை அவருக்குள்ளேயே விளைய வைத்தார். அவ்வாறு அவருக்குள் விளைய வைத்த நிலைகளை எமக்கு உபதேசித்தார்.

குரு உபதேசித்த உணர்வினை அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை யாமும் நுகர்ந்தோம் கண்டறிந்தோம்.

விண்ணுலக ஆற்றலை எவ்வாறு பருக வேண்டும்? எல்லோரையும் எப்படிப் பருகச் செய்ய வேண்டும் என்று உணர்த்திய அருள் நெறிகளை நீங்களும் பெறவேண்டும்.

அதனை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணத்தால் எண்ணும் பொழுது மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்ந்து இந்த உணர்வை வலுக்கொண்டதாக மாற்றிட முடியும்.

இம்மனித வாழ்க்கையைக் கடந்து செல்வோம் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நிலைத்திடும் நிலையாக இருந்திட முடியும்.

நாம் அனைவரும் அத்தகைய நிலைகளை நிச்சயம் பெறுவோம்.