“கண்ணன்…” வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான் – விளக்கம்

Image

krishna-janmashtami.jpg

“கண்ணன்…” வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான் – விளக்கம்

நாம் பாலைத் தயிறாக்கிக் கடைந்து அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுத்து அந்தச் சத்தை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

கண்ணன் வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான். கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு மாடு மிரண்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

1.அப்பொழுது அது சுவாசித்த உணர்வின் அணுவிற்குள் இருக்கக்கூடிய

2.“அந்த நுண்ணிய அலையை”

3.வெண்ணெயைத் திருடுகின்றான்.

அதை நம் கண்கள் கவர்ந்து அதனின் வலிமையை (வெண்ணையை) உணர்த்தி “மாடு மிரண்டு வருகிறது… நீ விலகிச் செல்” என்று கண்கள் நம்மை வழி நடத்துகின்றது.

உதாரணமாக இன்று ஒருவன் தான் சம்பாதித்து வீட்டைக் கட்டித் தன் வீட்டிற்குள் பணத்தை வைத்திருக்கிறான். ஆனால், மற்றொருவன் பணம் இருப்பதை அறிந்துணர்ந்து அதைக் கொள்ளையடிக்க வருகின்றான்.

அப்பொழுது கொள்ளையடிக்கக் கூடியவன் அந்த வீட்டை நோக்கி வரும் பொழுது, “அந்த வீட்டிற்குரியவன் எப்படி இருக்கிறான்?” என்று தன் நினைவில் எண்ணிப் பார்க்கிறான்.

அங்கு அந்த ஆள் இருப்பதைப் பார்த்தவுடனே…, “அந்த வீட்டிற்குள்… அந்தப் பணத்திற்குரியவன் இருக்கிறான்” என்று இந்தக் கண்ணனே உணர்த்துகின்றான்.

அதே சமயம் அவன் உடலிலே

1.அந்த வீட்டுக்காரர் இருக்கிறார் என்ற உணர்வில்

2.“அவன் மறைந்து நம்மைப் பிடிக்க வேண்டும்” என்று எண்ணுவான் என்பதை

3.“திருடன்” என்ற நிலையில் இவன் எண்ணுகின்றான்.

அந்த உணர்வின் சக்தியைத் திருடனுக்கு அந்தக் கண் தான் காட்டுகின்றது.

வீட்டுக்காரன் இருக்கிறான்.., நீ அந்தப் பக்கம் போகாதே என்கிற நிலையைத் திருடச் செல்பவனுக்குச் சொல்லி “நீ இந்தப் பக்கம் போ” என்று வழி காட்டுகின்றது.

1.ஆனால் அந்த வீட்டுக்காரனுக்கோ,

2.“திருடன் வருகிறான்.., அவனை எப்படிப் பிடிப்பது?” என்று

3.முக்கிய ஆலோசனையைக் கண்ணன் சொல்கின்றான்.

4.ஆக, அவன் எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் இருக்கக்கூடிய வெண்ணையை கண்ணன் இவனுக்கும் கொடுக்கின்றான்.

திருடப் போகக்கூடிய இந்த உணர்வின் சத்தை இந்தக் கண் திருடனுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையையே அங்கே வீட்டுக்குச் சொந்தக்காரனுக்கும் உணர்த்துகின்றது.

இந்த உணர்வின் சேர்க்கையிலே உடலுடன் பிணைந்த நம் வாழ்க்கைக்காக வேண்டி

1.நாம் எந்தெந்த உணர்வைச் செலுத்தி

2.கண்கள் வழியாக நம் உடலுக்குள் எதை இணைக்கின்றோமோ

3.அந்த உணர்வைச் சுவாசிக்கின்றோம்.

சுவாசித்து அந்த உணர்வின் அலையை நமக்குள் அணுக்களாகச் செலுத்தினால் அதை நாம் எண்ணும் பொழுது அதே உணர்வலைகள் கண்ணிலே பட்டவுடனே நம் குணத்தைப் பாதுகாக்கும்.

இதுவெல்லாம் வியாசகரால் கண்டுணரப்பட்டு காவியமாக உணர்த்தப்பட்டுள்ள பேருண்மைகள். அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஞானிகள் உணர்வுடன் காவியத்தைப் படித்தீர்கள் என்றால் அதில் உள்ள மூலங்களை அறிந்து “நாம் யார்?” என்ற நிலையில் நம்மை நாம் அறிய முடியும்.

நமக்குள் எது இயக்குகின்றது. எதை நமக்குள் இயக்கச் சக்தியாக மாற்றிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த உடலுக்குப் பின் என்ன என்பதை அறிந்து அந்த ஞானிகளுடன் ஒன்றிட முடியும்.

Image

Divine - Inner glow.jpg

அனைவரும் மகிழ்வதைக் கண்டு “நீ அருள் பேரானந்தப் படவேண்டும்.., உன்னில் காண்… உன்னில் நீ பார்… உன்னை நீ பார்…” என்றார் குருநாதர்

பிறர்படும் துயரங்களிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என்று நாம் நினைவாக்கப்படும்போது அந்த நினைவின் ஆற்றலே தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் சக்தியாகும்.

உன்னில் வந்த தீமைகளை அகற்ற பல முறை உன்னைச் சோதித்தேன். தீமைகள் எவ்வாறு சாடுகின்றதென்றும் தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தையும் உன்னிலே பாய்ச்சுகின்றேன் என்றார் குருநாதர்.

இந்த உணர்வின் துணை கொண்டு நீ விண்ணின் ஆற்றலை எப்படிப் பருகுகின்றாய்? இந்த மண்ணுலகில் உனக்குள் சேர்ந்த தீமையை எவ்வாறு நீக்குகின்றாய்? என்ற உணர்வினை

1.“உன்னில் காண்”,

2.“உன்னில் நீ பார்”,

3.“உன்னை நீ பார்”

என்ற இந்த உணர்வினை குருநாதர் உபதேசித்து அந்த உணர்வின் வழிப்படி எமக்குள் பதிவாக்கி இந்தப் பேருண்மையை எமக்குள் வளர்க்கும் திறனைப் பெருக்கினார்.

அத்தகைய உணர்வின் ஆற்றலைத்தான் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

இந்த உணர்வினை நீங்கள் எண்ணத்தால் வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற அருள் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கிடும் சக்தியை உங்கள் உயிரே உருவாக்குகின்றது.

நீங்கள் எண்ணியது எதுவோ அதன் வழிப்படி உங்கள் உயிர் அதை உருவாக்குகின்றது. நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ இந்தக் கண்கள் அதை வழி நடத்துகின்றது.

ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அதனின் உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கிவிட்டால் தீமை செய்கின்றான் என்று உணர்கின்றோம். அதன் அணுவாகவே நமது உடலில் உருவாகிவிடுகின்றது.

ஆகவே அத்தகைய தீமை செய்யும் அணு நமக்குள் உருவாகி விட்டால் அதனின் உணவுக்காக அது உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்போது நம்மை அறியாமலேயே நாம் தீமை செய்வோராக ஆகி விடுகின்றோம். தீமையை செய்யும் சக்தியின் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட

1.தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை

2.நீங்கள் கேட்கும் பொழுதும் இதைக் கூர்ந்து கவனித்துப் படிக்கும் பொழுதும்,

3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை பெறும்போது

4.அதை உங்களுடைய கண்கள் உற்றுப் பார்த்து உணர்வினை நுகரச் செய்து

5.உணர்வின் தன்மையை அணுவாக்கி  உங்கள் உடல்களில் நல்ல உணர்வின் அணுக்களைப் பெறச் செய்வதற்கே

குருநாதர் காட்டிய அருள் ஒளியை யாம் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் – அவர் கண்ட பேருண்மையையும் அகண்ட நிலையும் அவருக்குள் கண்டறிந்த உணர்வினை…,

1.நான் கண்ட உண்மையின் உணர்வை உனக்குள் உணர்ந்து கொள்

2.உன்னை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீ விடுபடு

3.அந்த உண்மையின் உணர்வை நீ உனக்குள் பெருக்கு

4.ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளில் இதைப் பெருக்கு

5.அதன் உணர்வினை இந்த  நாட்டிலே பெருக்கு

6.அதைக் கவர்ந்தோர் உணர்வுகளிலே இருள் நீங்கி மெய்ப் பொருள் காணும் சக்தி பெறட்டும் என்பதற்கே

7.“உன்னில் இதைப் பதிவு செய்கின்றேன்” என்று இதைச் சொன்னார்.

இவ்வாறு அவர் எமக்குள் பதிவு செய்ததை யாம் நினைவு கொண்டு உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

அவர் சொன்ன உணர்வினை யாம் வெளிப்படுத்தும் பொழுது இந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இந்த உணர்வுகளை நீங்கள் அனவரும் திரும்பத் திரும்பக் கேட்டு உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

அப்படிப் பதிவாக்கும் பொழுது அன்று “வான்மீகி மகரிஷி” கண்ட உண்மைகளையும் அன்று “வியாசக பகவான்” கண்டுணர்ந்த உண்மைகளையும் இதற்கு முந்தி அன்று “துருவ மகரிஷி” கண்டுணர்ந்த உண்மைகளையும் நீங்கள் “தொடர் வரிசையில்” காணலாம்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தையும் நாம் பெற்றால் இருளை உருவாக்கும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனி பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.

நாம் அடைய முடியுமென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி

1.உங்களுக்குள் பதிவாக்கி நீங்களும் அதை நினைவாக்கி

2.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உங்களுக்குள் பெருக்கும்போது

3.அதைக் கண்டு யாம் மகிழ்ச்சியடைந்து அதனை மீண்டும் எமக்குள் பெருக்கி

4.உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்டி

5.அருள் ஒளியை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வினை வெளிப்படுத்தி

அந்த உணர்வைக் கண்டு ஒவ்வொருவரும் மகிழ்வதைக் கண்டு “அருள் பேரானந்தப் படவேண்டும்” என்று குருநாதர் காட்டினார்.