“ஆத்ம சுத்தி” தீமைகளை எப்படி நீக்குகின்றது…?

soul cleaning.jpg

ஆத்ம சுத்தி தீமைகளை எப்படி நீக்குகின்றது…?

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அது எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

நம் புலனறிவு (கண்களால்) கொண்டு முன்னால் பார்ப்பது வெகு தூரத்தில் உள்ளதைக் கூர்ந்து கவனித்து அப்பொருளை நாம் காண முயற்சிக்கின்றோம். அந்தப் பொருளின் சத்தின் தன்மையை நாம் அறிகின்றோம்.

1.நம் உணர்வுக்குள் அனைத்து நிலைகளிலும் “கண் இணைக்கப்பட்டிருக்கின்றது”,
2.நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோ அந்த உணர்வின் நினைவலைகள்
3.உயிரிலே பட்டு அதன் வழி தான் தெரியும்.

அதைப்போல அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் கண்ணின் நினனைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று
1.உள் நினைவிலே உங்கள் உடலுக்குள் செலுத்தப்படும்போது
2.உடலிலுள்ள அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி இணைகின்றது.

அப்படி இணையும் பொழுது நமக்குள் நம்மையறியாமல் உட்புகுந்த அணுக்களுக்குள் சேரும் தீமைகளை
1.வேக வைத்து ஆவியாக மாற்றி உடலிலிருந்து அப்புறப்படுத்தி விடுகின்றது.
2.அதற்குப் பின் நம் உடலில் தீமை செய்யும் அணுக்கள் உற்பத்தியாவதில்லை.
3.அதாவது தீய வினைகள் நமக்குள் வளர்வதில்லை.
4.நம் எண்ணங்களும் மாசுபடுவதில்லை.
5.நம் ஆன்மா பரிசுத்தமடைகின்றது.

இதுதான் ஆத்ம சுத்தி. இந்த ஆத்ம சுத்தியை உங்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் தனித்து நாள் முழுவதும் இருந்து பெற முடியாத சக்தியை ஒரு பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்றபின் அடுத்து உங்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும் நீங்கள் சந்திக்கும் துன்பங்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள “இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்” உங்களுக்குப் பயன்படும்.

பயன்படுத்திப் பாருங்கள்…!

1 thought on ““ஆத்ம சுத்தி” தீமைகளை எப்படி நீக்குகின்றது…?

Leave a Reply